Friday, May 20, 2011

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து ! கீழக்கரைமகளிர் சுய உதவிக்குழு தீர்மானம் !



கீழக்கரை, மே 20:
கீழக்கரை யில் நடந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கூட்டத்தில் ஏராளமான பெண் கள் கலந்து கொண்டனர்.
கீழக்கரையில் சீதக்காதி மகளிர் சுய உதவிக்குழு, தஙகம் மகளிர் சுய உதவிக்குழு, மாஸா அல்லா மகளிர் சுய உதவி குழு, பேரொளி மகளிர் சுயஉதவி குழு, அல் பிஸ்மி மகளிர் சுய உதவிக்குழு, உதயம் மகளிர் சுய உதவி குழு உள்பட பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. பதினெட்டு வாலிபர் தர்கா வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசீம் பீவி கல்லூரி முதல்வர் சுமையா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வட்டியை ஒழிப்பது, சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது, ரத்த தானம், பிளாஸ்டிக் பை ஒழிப்பு ஆகியவற்றை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. சுய உதவிக்குழுக்களின் தலைவர்கள் ஜீனத்து மரியம், ஹம்ருன் நிஷா, ஹைருன் நிஷா, ஜகுபர் ஆய்ஷா, அனிஷா, மூபிகா மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது
______________________________________________________________________________________
சுய உதவிக் குழு என்றால் என்ன ?

சுய உதவிக் குழு என்பது 15-20 உறுப்பினர்களை கொண்ட குழுவாகும். அனைத்து உறுப்பினர்களும் மனமுகந்து சிறு சேமிப்பு கடன் மற்றும் சமூக நலனில் ஈடுபடுவர்.
சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள்கள் யாது?

  • உறுப்பினர்களிடையே சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவர்
  • சிறு சேமிப்பு பழக்கத்தை கிராம பெண்களிடம் அறிவுறுத்துவர்
  • வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் சமூக உறவுகளை மேம்படுத்தி ஊரக சமூகத்தின் தன்னம்பிக்கையை வளர்ப்பர்
  • உறுப்பினர்களிடையே முகாமைத்து மேம்படுத்துவர்
  • வருமானம் தரும் தொழில்களை உண்டாக்குவர்
  • கல்வி அறிவு மேம்படுத்துதல், விழிப்புணர்வு மற்றும் சம உரிமை பெறுதல்
  • விரிவாக்க கல்வி மற்றும் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப மாற்றம் மற்றும் விற்பனை தகவல்களை தருவர்
  • புதிய தொழில்நுட்பங்களை பற்றி கலந்தாலோசித்தல் மற்றும் மாற்றங்களை மேற்கொள்வர்

நீடித்த சுய உதவிக் குழுக்களின் தனித்தன்மை யாது?
சுய உதவிக் குழுக்களின் வலிமை மற்றும் நீடித்த செயல்பாட்டிற்கு குழு உறுப்பினர்களின் திறமை மற்றும் நற்பண்புகள் மிக முக்கிள வாய்ந்ததாக கருதப்படுகிறது.

  • குழு உறுப்பினர்களை புதிய தொழில்நுட்பங்கள் கலந்தாலோசித்தல் போன்றவற்றை ஊக்கப்படுத்துதல்
  • கருத்துகளை மற்ற குழுவிடம் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தல்
  • அனைவரின் கலந்தாலோசித்து முடிவு எடுத்தல்
  • தினசரி அனைவரும் கூடி பிரச்சனைகளை ஆராய்தல் மற்றும் விதிமுறைகளை மீறாமல் செயல்படுதல்
  • குழு நடவடிக்கை மற்றும் முடிவுகளை பதிவு செய்தல்
  • குழு முடிவுகளை தினசரி பின்பற்றுதல்
  • குழு தலைவர், செயலாளர், பொருளாதாரர் ஆகியோரை ஒருமனதாக தேர்வு செய்தல்

சுய உதவிக் குழு எப்பொழுது தொடங்கப்பட்டது?
1989 ஆம் ஆண்டு சுய உதவிக் குழு தொடங்கப்பட்டது.
சுய உதவிக் குழுக்களுக்கு எந்த வங்கிகள் கடன் வழங்க தயாராக உள்ளன?
தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளும் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க சம்மதித்துள்ளன.
சுய உதவிக் குழு கணக்கு பராமரிப்பின் குறைந்த தொகை யாது?
குறைந்த தொகையாக 1000 ரூபாயாவது சுய உதவி குழு கணக்கில் இருக்க வேண்டும்.
அடிப்படை கிளை என்றால் என்ன?
அடிப்படை கிளை என்பது மாவட்ட மற்றும் கிராமங்களின் வங்கி கிளைகளில் சுய உதவிக் குழுக்கள் கணக்கு வைப்பதாகும். மாவட்டம் மற்றும் கிராமங்களில் ஓர் கிளைக்கு மேல் இருப்பின் சுய உதவிக் குழுக்கள் எவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்களோ அதுவே அடிப்படை கிளையாகும்.
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி இருக்கிறதா?
சுய உதவிக் குழுக்களுக்கு தானியங்கி இயந்திர (ATM) பரிவர்த்தனை வசதி கிடையாது.
சுய உதவிக் குழுக்கள் பதிவு மேற்கொள்ள வேண்டும்?
சட்டப்படி பதிவு செய்வது அவசியமல்ல ஏனெனில் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பொதுவாகவே படிப்பற்றவர்களாவர்.
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 20க்கு மேல் சேர்க்கப்படமாட்டாது?
அதிக உறுப்பினர்கள் இருப்பின் அவர்களுக்குள் ஒற்றுமை இருக்காது. இரண்டாவதாக 20 உறுப்பினர்களுக்கு மேல் இருப்பின் நிதி இயக்கத்தில் பங்கு பெறும் அனைவரும் பதிவு செய்திருக்க வேண்டும்.
சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக தகுதியுடையவர் யாவர்?
சுய உதவிக் குழு என்பது வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டதாகும். பெண்கள் அல்லது விவசாயிகள் ஓர் குறிப்பிட்ட பயிர் அல்லது விளைப்பொருட்களை விளைவிப்பவர்கலோ அவர்களை இஞ்சி, மஞ்சள், குழு என்று கூறுவர். சுய உதவிக் குழுக்களில் உறுப்பினர்களாக வேண்டிய தகுதிகள் பின்வருவன.,

  • உறுப்பினர்கள் வயது வந்தோராக இருத்தல் வேண்டும்
  • குடும்பத்தில் உள்ள ஓர் நபர் மட்டும் குழு உறுப்பினர் ஆகலாம்
  • உறுப்பினர்கள் அனைவரும் சமூக பொருளாதார அந்தஸ்தை அனுபவிப்பர்
  • உறுப்பினர்கள் அனைவரும் உள்ளூர் கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர்
  • உறுப்பினர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்களின் உறுப்பினர்களாக இருக்க இயலாது

அதிக சேமிப்புகளின் மூலம் சுய உதவிக் குழுக்களை வலிமையான குழு என்று கூற முடியுமா?
அதிக சேமிப்பு இல்லாமல் தினசரி சேமிப்புகளைக் கொண்டு வலிமையான குழு என்று கூறலாம்.
குழுக்கள் எப்பொழுது உள்கடன் வாங்கலாம்?
குழுக்கள் எவ்வளவு சீக்கிரமாக வாங்க முடியுமா வாங்கலாம். முதல் அல்லது இரண்டாவது மாதத்திற்குள் பெறலாம்.
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்களின் உதவி வேண்டுமா அல்லது மற்ற முகாம்கள் குழு அமைவதற்கு உதவலாமா?
குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனங்கள் அல்லது மற்ற முகாம்களில் உதவி அவசியம் தேவைப்படுகிறது.
வங்கி கடன் எப்பொழுது தொடங்கப்பட வேண்டும்?
குழு கூட்டம், சிறு சேமிப்பு மற்றும் குழுக்களுக்குள் சேமிப்பு தொகையை பங்கிடுவது ஆகியவற்றிற்கு பிறகு வங்கி கடன் தொடங்கப்படும்.
மகளிர் திட்டம் என்றால் என்ன?
மாவட்டங்களில் உளவு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாமின் திட்ட அலுவலர், பெண்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்டத்தை தொடங்கியுள்ளார்.

சுய உதவிக் குழுக்களின் குறிக்கோள் யாது?
பெண்களுக்கு சம உரிமை மற்றும் பொருளாதார மேம்பாடு சுய உதவிக் குழு தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் வளாகம் யாது?
பூமலை வணிக வளாகம் .
சுய உதவிக் குழுக்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் உரியதா?
இருபாலருக்கும் உரியதாகும் இருப்பினும் பெண்கள் ஊக்கப்படுத்தப்ப
சுய உதவிக் குழு யாரால் அமைக்கப்படுகிறது?
சுய உதவிக் குழு ஆரம்ப காலத்தில் வெளி நிறுவனங்களில் தூண்டுதல் மற்றும் விரிவாக்க முகாம், சமூக சேவகர்கள் திட்டம் மேற்பார்வையாளர்களின் உதவியுடன் இயக்கப்பட்டது. இதற்கு பதிலீடாக கிராம உறுப்பினர் அவர்களுக்கு குழு அமைத்து செயல்படுவர்.
சுய உதவிக் குழு என்பது அரசு திட்டமா?
சுய உதவிக் குழு என்பது அரசு இயக்கும் திட்டம் அல்ல கிராம மக்களின் கமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்துவதாகும். சுய உதவிக் குழு அமைப்பதற்கு அரசு சாரா நிறுவனம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவலாம்.
சுய உதவிக் குழு அமைப்பில் அரசு ஆதரவு யாது?
ஆரம்ப காலத்தில் சுய உதவிக் குழுக்கள் தனியார் நிறுவனங்களின் மூலம் இயக்கப்பட்டது. பின்பு சுய உதவிக் குழுக்கள் வலிமை அடைந்தவுடன் உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாட்டிற்காக வாய்ப்பு தேடுவர் குழு தொடர்பு இதர நிறுவனற்களுடன் மேற்கொள்வதற்காக அரசு ஆதரவு தெரிவித்தன.
சுய உதவிக் குழு பதிவு செய்வது சட்ட பாரதீனம் அவசியமா?
குழு பதிவு செய்வது சட்ட பாரதீனமாக அவசியம் அல்ல. எனினும் அவற்றின் அதீத செயல்பாடுகளுக்கு, விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.
சுய உதவிக் குழு அமைப்பில் பண சேமிப்பு அவசியமா?
பண சேமிப்பு என்பது சுய உதவிக் குழு அமைப்பில் அவசியமே ஆகும். உறுப்பினர்கள் சேமிக்கும் குறிப்பிட்ட தொகையை ஒன்றாக சேர்த்து பிரச்சனைகள் ஏற்படும் பொழுது, தீர்வு காண வழங்குவதாகும்.
சேமிப்பு கணக்குகளை ஆரம்பிக்கும் காரணம் யாது?

  • குழுவின் மொத்த தொகையை பாதுகாப்பாக பயன்படுத்துதல்
  • சேமிப்பு வட்டி தொகையை அனைவரும் சமமாக பங்கு பிரித்தல்
  • வங்கி மற்றும் குழுக்களின் இடையே வலிமையான தொடர்பு அமைத்தல்

வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

  • குழு வங்கி கடன் மற்றும் அதன் பரிவர்த்தனை குழு கூட்டத்தின் தகவல்கள் அடங்கிய விதிமுறை ஏடு
  • குழு சேமிக்கும் தொகையின் மதிப்பு
  • குழு நிர்வாக உறுப்பினர்களின் 3 புகைப்படங்கள்
  • வங்கி கணக்கு வைத்துக்கொள்ளும் நபரின் அறிமுக கடிதம்

பின்வரும் நிபந்தனைகள் பின்பற்றினால் வங்கிகளின் கணக்கு ஆரம்பிப்பது மிக எளிதாகும்:

  • சுய உதவிக் குழுக்களின் இரப்பர் முத்திரை
  • குழு கூட்டத்தின் விதிமுறைகள்
  • குழு பதிவேடு பராமரிப்பு
  • குழு மற்றும் வங்கிகளின் தொடர்பு தகவல்கள்

சுய உதவிக் குழுக்களினால் பராமரிக்கப்படும் பதிவேடுகள் யாவை?

  • வருகை பதிவேடு:

குழு கூட்டத்திற்கு பங்கேற்கும் அனைவரின் வருகையை பதிவு செய்வதாகும் அனைத்து குழு உறுப்பினர்களும் கையெழுத்திட வேண்டும்

  • பதிவு பதிவேடுகள்:

குழு கூட்டத்திற்கு கலந்தலோசிக்கும் அனைத்து தகவல்களையும் மற்றும் முக்கிய தீர்மானங்களை பதிவு செய்வது ஆகியவற்றை கொண்டதாகும்

  • சேமிப்பு பதிவேடுகள்:

இப்பதிவேடுகளில், குழு உறுப்பினர்களின் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் மொத்த சேமிப்பு தகவல்களை தரவல்லதாகும்

  • வரவு கணக்கு பதிவேடு:

குழுவின் மொத்த தொகையின் பரிவர்த்தனைகள் தகவல்களை கொண்டதாகும்

  • தனிநபர் வங்கி கணக்கு புத்தகம்:

அனைத்து குழு உறுப்பினர்களிடம் இப்புத்தகம் கையில் இருக்க வேண்டும். இப்புத்தகத்தை குழு கூட்டத்திற்கு எடுத்து வர வேண்டும்.
வங்கி கணக்கு பராமரிப்பின் போது பின்பற்ற வேண்டிய குறிப்புகள் யாவை?

  • வங்கி கணக்குகள் தெளிவாக இருக்க வேண்டும்
  • ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் வங்கி கணக்கு ஆரம்பிப்பதன் நோக்கம் மற்றும் முக்கியத்துவங்களை அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்
  • வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் குழு உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் தெரிவது போல் மேற்கொள்ள வேண்டும்
  • அனைத்து குழு தகவல்கள் மற்றும் தீர்மானங்களை பதிவு செய்தல்
  • அனைத்து பதிவேடுகளும் சரிவர கண்காணிக்கப்பட வேண்டும்

சுய உதவிக் குழுவில் எவ்வித நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்?
குழு மேலாண்மை மாதிரிகள்:
முன் திட்டமிடல் மற்றும் குழுக்களின் கூட்டம் ஏற்பாடு செய்யும் நோக்கம் ஆகியவை ஆகும்.
வருகை மாதிரிகள்:
குறைந்த உறுப்பினர்கள் குழு கூட்டத்தை பங்கேற்கும் நிலைமையை தடுப்பதாகும்.
தேர்வற்ற மாதிரிகள்:
குழு கூட்டங்களில் பங்கேற்காது சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை கொண்டதாகும்.
நிர்வாக மாதிரிகள்:
நிர்வாகத்தின் சிறப்பான செயல்பாடுகள் பற்றியதாகும்
நிதி மேலாண்மை மாதிரிகள்:
உறுப்பினர்கள் கட்டணம் வங்கி கடனுக்கான வட்டி விகிதம் கடன் தர குறைந்த மற்றும் அதிக தொகை பற்றிய தகவல்களை தருவதாகும்.

மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு அமைப்பு:
இந்தியாவில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஊரக மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இத்தகைய தன்னிச்சை தொண்டுகளினால் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கப்பார்ட் (CAPART) இரண்டு முக்கிய முகாம்களான மக்கள் செயல் மற்றும் ஊரக தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான குழு மற்றும் இந்திய மேம்பாட்டில் மக்கள் செயல் (PADI) ஆகியவற்றை இணைத்து உருவானதாகும். கப்பார்ட் என்பது தனிச்சு செயல்படும் நிறுவனமாகும். அவை சங்க பதிவு (1980) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். மேலும் இவை ஊரக மேம்பாட்டு செயலகம் இந்திய அரசின் கீழ் இயங்குவதாகும். தற்போது கப்பார்ட் நிறுவனம் ஊரக மேம்பாட்டு நலனில் அதிக ஆர்வம் காட்டி நாட்டில் சுமார் 12,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்கிறது.
http://capart .nic.in/orgn/index.html.
விரிவாக்க செயல்பாடுகளில் ஊரக பங்கேற்பு அணுகுமுறை:
கடந்த 1980 ஆம் ஆண்டு மற்றும் 1990 ஆம் ஆண்டு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் வயல்வெளி அனுபவங்கள் வழிமுறைகள் மற்றும் புதுமைகளை அறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பங்கேற்பு அணுகுமுறை என்பது மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அணுகுமுறையை பற்றி விரிவாக எடுத்து கூறுவதாகும். மேலும் இவற்றை வழிகாட்டி கொள்கைகள் எனக் கூறலாம்.
பங்கேற்பு அணுகுமுறை மற்றும் வழிமுறை இடத்திற்கு தகுந்தவாறு மாறுபடும். இத்தகைய பங்கேற்பு வகைமுறை விரிவாக்க பகுதிகளில் பல்வேறு பயன்படுத்தப்படுகிறது. அவை குறிப்பிட்ட கூழலை ஆராய்வது பிரச்சனைகளை அறிய செயல் சார்ந்த பண்கள் திட்டத்தின் வெற்றி மற்றும் தோல்விகளை ஆராய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் பங்கேற்பு வேளாண் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் அவசியம் தேவைப்படுகிறது.

சுய உதவிக்குழுக்களின் தரம் பிரித்தல்

தரம் பிரித்தல் 1

சுய உதவிக் குழுக்களின் தரம் பிரித்தல் அடிப்படையில் எவ்வாறு பிரிப்பது என்றால்

  • உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)
  • வங்கி பணியாளர்
  • அரசு சாரா நிறுவன பணியாளர் (சுய உதவிக் குழு ஒருங்கிணைப்பாளர்)

சுய உதவிக்குழு அமைத்த அறு மாதம் கழித்து, தரம் பிரித்தலை மேற்கொள்வர் முதல் தரம் பிரித்தலில், உதவி திட்ட அலுவலர், குழு 6 மாத கால செயல்பாடுகளை ஆராய்வர். அரசு சாரா நிறுவன பணியாளர்கள் அவற்றை உறுதிபடுத்துவர். உறுதி படுத்தலுக்கு பிறகு, வங்கியிலிருந்து சுழல் நிதி பெறுவதற்கு தயார் படுத்தப்படுவர், உறுதிபடுத்தலின் பொழுது பின்வருவனற்றை சமர்ப்பிக்க வேண்டும்

  • குழு உறுப்பினர்களின் விபரங்கள்
  • குழு கூட்டத்தை பற்றின விபரங்கள்
  • குழு சேமிப்பு தொகை
  • பதிவேடுகள் பராமரிப்பு
  • கடன் விபரங்கள்

1 வருடம் கழித்து, இரண்டாம் தரம் பிரித்தலை மேற்கொள்ள வேண்டும் இத்தகைய இரண்டாம் தரம் பிரித்திலின் போது, அவற்றை திரும்ப செலுத்தும் தகுதியை ஆராய்வர். மேலும், திட்ட அறிக்கையை இரண்டாம் தர பிரித்தலின் போது சமர்பிக்க வேண்டும்.

வயதின் அடிப்படையின் மூன்று குழுக்குகளாக பிரிக்கப்பட்டுள்ளன

  • குழு 1 - 1 வயதுக்கு உட்டபட்டவர்கள்
  • குழு 2 - 1-3 வயதுக்குட்பட்டவர்கள்
  • குழு 3 – 3 வயதுக்கு மேல் உள்ளவர்கள்

புள்ளிகள் பெறும் அடிப்படையில் அனைத்து குழுக்களும் ஏஇ பிஇசிஇ என தர பட்டியல் மேற்கொள்ளப்பட்டன. குழு 3 (4 வயதுக்கு மேல் உள்ளவர்கள்) ‘ஏ’ தரத்தில் இடம் பெறுவர்.
கடன் பெறுவத்றகு தேவையான குறைந்தபட்ச அடிப்படை தகுதி

  • சுய உதவிக்குழு சுமார் 6 மாதம்மாவது செயல்பட்டிருக்கு வேண்டும்
  • சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 10-20 நபர்களை கொண்டதாக இருத்தல் அவசியம் 20க்கு மேல் நபர் சாத்தியமல்ல
  • சுய உதவிக் குழு கூட்டம் மாதத்திற்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும்
  • உள்ளூர் மற்றும் வெளியூர் கடன்கள் மீட்பு சதவிகிதம் 85 சதவிகிதத்திற்கு கீழ் இருத்தல் ஆகாது.
  • 50 சதவிகித குழு மக்கள் உள்ளூர் கடனகளாக குழு நிதியிலிருந்து எடுத்துக்கொள்வார்கள்
  • அனைத்து குழு உறுப்பினர்களம் சேமிப்பை தினசரி விடாது மேற்கொள்ள வேண்டும்
  • குழுக்கள் கணக்கு வழக்கு புத்தங்களை சரிவர வராமரிக்க வேண்டும்
  • அனைத்து குழுக்களும் விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்

தர பிரித்தல் படிவங்கள்


முற்றம், தமிழ் செய்தி நாளேடு, சுய உதவிக்குழுக்கிள்ன வெற்றி மற்றும் அனுபவங்களை தெளிவாக எடுத்துக் கூறவல்லதாகும். மேலும் அரசு திட்ட தகவல்கள் மற்றும் மகளிர் திடடம் பற்றி வயல்வெளி பணியாளர்கள் சுய உதவிக்குழுக்கள் மற்றும் திட்ட பணியாளருக்கு தெரிவிவப்பதாகும்.
யுனிசெஃப் (), நபார்டு (), தமிழ்நாடு
வங்கியாளர் காசோலை புத்தகத்தை 1 வருடம் சுய உதவிக் குழு 21 செயல்பாட்டிற்கு பிறகே தருவர்
சுய உதவிக்குழுக்கள் விதிமுறைகளை பின்பற்றி அங்கீகரித்த கைடியழுத்துடன் புகைப்படம் அளிக்க வேண்டும்
சுய உதவிக் குழுக்களின் நீடித்த வளர்ச்சிக்கு பிரதிநிதிகளை ஆண்டுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்
சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தங்களது பணத்தை வார தங்களது சேமிப்பு மேற்டிகாள்ள ஊக்குவிக்கின்றன.
2 வருடத்திற்கு மேல் பணிபுரிந்த சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் தர தேர்வுக்கான வழிமுறைகள்
70க்கு மேல் மதிப்டிபண்கள் பெற்ற சுய உதவிக் குழுக்கள் கடன் பெற தகுதியானவர் ஆவர்.
50 -69 மதிப்டிபண்கள் டிபற்ற சுய உதவிக்குழுக்கள் தேர்வு செய்ய படமட்டாது ஆயினும், அவர்களை ஊக்கப்படுத்தி டிசயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களைக் கண்டு, திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.
50 கீழ் மதிப்டிபண் பெற்ற சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது
குழுவின் கடன் திட்ட அறிக்கையை ஆய்வு மேற்கொள்ளும் போது, பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்
வெளிவாரி கடன்களை திரும்ப செலுத்துதல்
மண் பரிசோதனையைக் கொண்டு, புது குழுக்களான 6 மாதம் முதல் 2 வயது உடையவர்கன் பின்வரும் நிபந்த பூர்த்தி செய்ய வேண்டும் போதுமான குழு சேமிப்பு நிதி ( 5 மதிப்பெண்கள்)
குழு கணக்குளை தணிக்கை மேற்டிகாள்ளுதல் 5 மதிப்பெண்கள்
எய்ட்ஸ் கட்டுப்பாடு முகாம் () மற்றும் மாநில அரசு, முற்றம் செய்தி நாளேடுக்கு ஆதரவு தெரிவிக்கிறது. தற்போது 3 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி, மற்றும் சங்கத்தினால் வெளியிடப்பட்டு, சங்க பதிவு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மேம்பாட்டு முற்றம் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது சிவகாசியில் டேவ் () அச்சுக்கூடத்தின் மூலம் அச்சிடப்பட்டுள்ளது.

சுயு உதவிக் குழு - கடனுதவி
சுய உதவிக்கு குழுக்கள் 6 மாதம் செயல்பட்ட பிறகு மாவட்ட ஊரக மேம்பாட்டு முகாம் ரூ.25,000 முதல் 10,000 வரை சுழல் நிதியாக வழங்குவதும் மற்றும் ரூ.15,000 வங்கியிலிருந்து வழங்குவார்கள்
சுய உதவிக் குழுக்கள் தவறாது சேமிப்பை மேற்கொள்ள வேண்டும்.
வங்கிகள் குழுக்களுக்கு கடன் வழங்குவதும் அவற்றை உறுப்பினர்களுக்கு கொடுக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை ஏற்படுகின்றன.
நபார்டு வங்கி சுமார் 1.16 கோடி எழை குடும்பத்தை (குறைந்த பட்சமாக 5.80 கோடி மக்கள்) மார்ச் 2003 வரை ஆதரித்துள்ளது. மற்றும் சராசரியகா ரூ.28,560 யை கடனாக வழங்குகிறயது.
இரண்டாம் தடவை தரம் பிரித்தலுக்கு பிறகு குழுக்கள் வங்கி நிதி பெற நேரடியாக தகுதி பெறும். வங்கி கடன்கள் திட்ட செலவுகளின்டிப 9 சதவிகிதம் வரை வட்டி விதிக்கப்படும்.
அனைத்து வங்கிகளை காட்டிலும், சுய உதவிக் குழுக்களுக்கு ஆந்திரா வங்கி மற்றும் இந்தியன் வங்கிகள் நிதி வழங்குவதில் அதிக உதவி புரிந்துள்ளன. மொத்தமாக ரூ.2,049 கோடி வங்கி கடன்கள் மார்ச் 2003 சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கியுள்ளது.
வங்கியாளர் கவனத்திற்கு
சுய உதவிக் குழுக்களின் சேமிப்பு கணக்கு புத்தகம் ஆரம்பிக்க வங்கியாளருக்கு அரசு சாரா நிறுவனத்தின் அறிமுகம் தேவைப்படுகிறது.
சுய உதவிக் குழுக்கள் பணத்தை காசோலை அல்லது பே ஆர்டர் மூலமேபெற முடியும்
6 மாதம் – 2 வருடம் வரை செயல்பட்ட குழுக்களை வங்கி கடன் பெற தேர்வு செய்யும் வழிமுறைகள் 60 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் சுய உதவிக்குழு, கடன் பெற தகுதியானவர்கள் ஆவர்
35 முதல் 59 மதிப்பெண்கள் பெறும் சுய உதவிக் குழுக்கள் தேர்வு செய்யப்படமட்டாது, ஆயினும் அவர்களை ஊக்கப்படுத்தி செயல்பாட்டில் தீவிரம் காட்டுவதன் மூலம், அவரது முன்னேற்றங்களை கண்டு திரும்ப ஆய்வு செய்ய முடிவு செய்வர்.
35-க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்ட மட்டாது. 6 மாதம் கழித்து திரும்ப ஆய்வு செய்யப்பட முடிவு செய்து

கடன் வகைகள்
தவணை கடன்
வேளாண் அல்லாத செயல்பாடுக்ள மற்றும் கிராம பண்ணைக்காக சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதால், மகளிர் திட்டத்திற்கு தரும் கடன் தவணை கடன் என்பதாகும்.
ரொக்க கடன்
சுண உதவிக் குழுக்கள் வங்கியிலிருந்து ழல் கடன்களை பெறலாம். மேலும் ரொக்க கடன்கள் பெறுவதால் பல வித சுய உதவிக்குழுக்கு தேவையான கடன்களை தவிர்க்கலாம்.
ஆதாயம்
கடன் தொகையை காட்டிலும் ஆதாயம் முக்கிய படமட்டாது
வட்டி விகிதம் இந்தியன் ரிசர்வ் நபார்டு வங்கிகளின் தற்போதைய வட்டி விகிதங்கள் பின்வருவன

நபார்டு – வங்கிகள் 5
வங்கிகள் சுய உதவிக் குழுக்கள்

நடைமுறைபடுத்தாது(ஆர்பிஐவிதிமுறைப்படி வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது)

சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய உதவிக் குழுவின் தீர்மானத்தின் படி
(ஆர்பி நபார்டு –ன் விதிமுறைப்படி மாற்றத்திற்கு உரியதாகும்)
பத்திரம் பாதுகாப்பு
அனைத்து குழு உறுப்பினர்களும் கடன்களை திரும்ப செலுத்துவதற்கு முக்கிய பொறுப்பானவர்கள்
பட்டுவாடா
கடன்கள் மொத்த தொகையாக அல்லது வெவ்வேறு கட்டத்தில் வெளியீடு செய்யப்படும். அல்லது குழுக்களின் விருப்பப்படியே வெளியிடப்படும். குழுக்களின் தீர்மானம்படி, அவை் தொகையை வங்கியிலிருந்து பெற்று கடன்களை ஏழை மக்களின் அவசர தேவைக்கு அனுமதிக்கப்படும்.
திரும்ப செலத்துதலுக்கான காலவரையறைகள்
தவணை கடன் இத்தகைய கடன்களுக்கு விடுமுறைகளே கிடையாது அது போல் திரும்ப செலுத்துதல் காலநிலையை நிர்ணயிக்க முடியாது. இக்காலவரையறையை வங்கிகளோ அல்லது சுய உதவிக் குழுக்களோ இணைந்து முடிவு மேற்கொள்ளும்.
ரொக்க கடன்
ரொக்க கடன் பெற சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் சேமிப்பு கண்ககு வைத்திருக்க வேண்டும். ஆயினும் மொத்த வருவாய், அனுமதித்த எல்லைக்கு கீழ் இருக்க கூடாது ஆண்டு இறுதியில், குழுக்களின் செயல்திறனைக் கொண்டு கணக்குகளை ஆய்வு செய்து புதுப்பிக்க வேண்டும். ரொக்க எல்லைகளை கிளை அலுவலர்களை குழுவின் செயல்திறனில் திருப்தி அடைந்து மற்றும் சுய உதவி குழுவின் விருப்பத்தை பொறுத்து அதிகரிப்பர். எனினும் வட்டியை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும் நபார்டு வங்கிகயின் பங்கு


Thanks .http://agritech.tnau.ac.in/ta/ngo_shg/shg_faq_ta.html

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.