Tuesday, May 3, 2011

கீழக்கரையில் கிரிக்கெட் பயிற்சி மையம் ! இளைஞர்கள் கோரிக்கை





மூர் ஹசனுதீன்

கீழக்கரையில் பல்வேறு அணிகள் சார்பில் கிரிக்கெட்விளையாட்டு சூடு பிடித்துள்ளது.சிறந்த வீரர்களை உருவாக்க இங்கு கிரிக்கெட் பயிற்சி மையம் அமைக்க வேண்டு்மென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விடுமுறை காலம் துவங்கிவிட்டதால் கீழக்கரையில் மாணவர்கள் ,இளைஞர்கள் ஏராளமானோர் கிரிக்கெட் விளையா்ட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.மார்னிங் ஸ்டார்,சவுத் ஸ்டா்ர் என்று ஐபிஎல் ரேஞ்சுக்கு தங்களி்ன் அணிகளுக்கு பெயர்களை சூட்டியுள்ளனர்.இந்த அணிகளில் சிலர் 130கிலோ மீட்டர் வேகத்தில் துல்லியமாக ,நேர்த்தியாக பந்து வீசுபவர்களு்ம் உள்ளனர்.ஆனா்ல் இவர்களுக்கு முறையான பயிற்சியில்லாததால் வெறும் பொழுது போக்கிற்காக விளையாடி செல்கின்றனர்.இப்பகுதியில் கிரிக்கெட் பயிற்சி மையம் அமைத்தால் திறமையான வீரர்களை உருவாக்க முடியும் என்று இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்குதெருவை சேர்ந்த அசாரூதீன் கூறுகையில் , இப்பகுதியில் முண்ணனி வீரர்களை கொண்டு 15 நாள் ,30 நாள பயிற்சி முகாம்கள் நடத்தினா்ல் இப்பகுதியிலிருந்து சிறந்த வீரர்கள் உருவாகி வருவார்கள் என்றார்.
இது குறித்து மூர் விளையாட்டு கிளப் தலைவர் ஹசனுதீனிடம் கேட்ட போது, நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நடத்தி பரிசளித்து ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தி வருகிறோம் .மேலு்ம் அரசின் விளையாட்டு துறை ஆதரவளித்தால் நாங்களே முண்ணனி கிரிக்கெட் வீரர்களை அழைத்து வந்து இலவச பயிற்சி முகாம்களை நடத்த தயராக உள்ளோம் என்றார்.,





1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.