Thursday, May 5, 2011

டிரான்ஸ்பார்மர் மீது லாரி உரசியதால் சேதம்: இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தம்

கீழக்கரை, மே: கீழக்கரையில் மின் மாற்றி மீது லாரி உரசி சேதம் ஏற்பட்டதால் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின் சப்ளை நிறுத்தப்பட்டது.
இப்போது சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், பிற பகுதிகளில் 3 மணி நேரமும் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக கீழக்கரையில் பகலில் 3 மணி நேரம் போக, பிற நேரங்களிலும் அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனிடையே கீழக்கரை அலவாக்கரைவாடி பகுதியில் செங்கல் சுமையை இறக்கிவிட்டு திங்கள்கிழமை திரும்பிச் சென்ற லாரி, அங்கிருந்த மின் மாற்றி மீது பக்கவாட்டில் உரசியது. இதனால் மின் மாற்றி சேதமடைந்ததோடு, உப மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் கரும்புகை ஏற்பட்டது. இதையடுத்து கீழக்கரையில் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவு முழுவதும் தூக்கமின்றி அவதிப்பட்டனர்.
இது சம்பந்தமாக உதவி மின் பொறியாளர் பால்ராஜ் கூறியது: திங்கள்கிழமை இரவு கீழக்கரை அலவாக்கரைவாடி பகுதியில் மின் மாற்றி மீது லாரி உரசியதால் சேதம் ஏற்பட்டது. சேத மதிப்புக்குரிய தொகையை மின் வாரியத்திற்கு கொடுப்பதாக லாரி உரிமையாளர் எழுத்து முலம் கொடுத்த வாக்குமூலத்தால், அதனை ஏற்றுக்கொண்டு வழக்கு போடாமல் லாரியை அனுப்பி வைத்துவிட்டோம். இதனால் ஏற்பட்ட மின் விநியோ நிறுத்தம் செவ்வாய்க்கிழமை பகலில் சீரமைக்கப்பட்டது என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.