Monday, May 2, 2011

கீழக்கரை சின்னக்கடைதெரு அருகே நின்ற மர்ம பைக் அகற்றப்பட்டது


ஒரு மாதத்திற்கு மேலாக சின்னக்கடை தெருவில் நிறுத்தப்பட்டிருந்த பைக்



சின்னக்கடை தெருவிலிருந்து கீழக்கரை காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்ட பைக்


கீழக்கரை மே.2. கீழக்கரை சின்னக்கடை தெருவில் ஒரு மாதத்திற்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மர்ம பைக் கீழக்கரை போலீசாரால் அகற்றப்பட்டது. டயர்கள் கழற்றப்பட்டு எலும்பு கூடு போல் காட்சியளித்த இந்த பைக் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

இது குறித்து தெற்கு தெருவை சேர்ந்த சேகு சதக் இப்ராகிம் கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது.இப்பகுதியில் உள்ளோர் தங்களுடையது இல்லை என்று கூறி விட்டார்கள் என்றார்.

இது குறித்து டி எஸ் பி முனியப்பனிடம் கேட்ட போது, இந்த டூ வீலர் யாருடையது என்பது பற்றி விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது போன்று மர்மமான முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் உடனடியாக பொது மக்கள் காவல் துறைக்கு தகவல் தர வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.