Sunday, May 1, 2011

கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை !

கீழக்கரை,
கீழக்கரையில் கடைகளில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறையினர் அதிரடியாக ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கீழக்கரையில் பெரும்பாலான கடைகளில், தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஐஎஸ்ஐ தர முத்திரையில்லாதது மட்டுமின்றி, குடிநீரும் தரமற்றதாக உள்ளது. குடிநீரை பருகினால், உடலுக்கு பல்வேறு நோய் வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
கீழக்கரையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘கீழக்கரையில் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் தாராளமாக விற்பனையாகிறது. இதனை வாங்கி பருகுவோர், நோய் வரும் அபாயம் உள்ளது. வள்ளல் சீதக்காதி மணிமண்டபம், சதக்கத்துல்லாஅப்பா தர்ஹா ஆகியவற்றை காண கீழக்கரைக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களும் தாகம் தணிக்க இங்குள்ள கடைகளில் குடிநீர் பாக்கெட் வாங்கி பருகி சிரமமடைகின்றனர். தவிர காலாவதி உணவு பாக்கெட்டுகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
மக்களின் நலன்கருதி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக களமிறங்கி ஆய்வு நடத்த வேண்டும்‘ என்றார்.
களமிறங்குமா சுகாதாரத்துறை?

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.