Thursday, May 5, 2011

கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

கீழக்கரை, மே

வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஏராளமானோர் வாக்களிக்காத நிலை ஏற்பட்டதால், கீழக்கரையில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என நகர் மக்கள் நல பாதுகாப்பு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் செயலாளர் முகைதீன் இப்ராகிம், தமிழக தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியாலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு அடையாள அட்டை கிடைக்காததாலும் வாக் காளர் அடையாள அட்டை இருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தினாலும், குறிப்பாக புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கிடைத்தும் வாக் காளர் படிவத்தில் பெயர் இல்லாததாலும், நகரில் பெரும்பான்மை வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. இதனால் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய வாக்காளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறைகளை சரி செய்து கீழக்கரையில் மறுவாக்கு பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comment:

  1. ottu kalai pathivue seidhu jananayaka kadamai seyyatha varkalai kurai koorukirom. Okay. Aanal bala murai muandrum ramanathapuram varai alaithum muraiyana adaiya attai tharatha arasu athigarikalai thandippathu yar?

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.