Saturday, May 14, 2011

கூடைக்கு கிடைத்த 6667 ஓட்டுகளால் தோற்ற தேமுதிக முஜிபுர் ரஹ்மான்

சுப.தங்கவேலன்

தேமுதிக முஜிபுர் ரஹ்மான்
கீழக்கரை மே 14&
திருவாடானை தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் 6 ஆயிரத்து 667 வாக்குகள் பெற்றது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் திமுக சார்பில் சுப.தங்கவேலன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேமுதிக சார்பில் முஜிபுர் ரஹ்மான் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் இருவருக்கும் துவக்கத்தில் இருந்தே கடும் போட்டியிருந்த நிலையில் சுப.தங்கவேலன் 64,165 வாக்குகள் பெற்றார். முஜிபுர்ரஹ்மான் 63,238 வாக்குகள் பெற்றார். 927 வாக்குகள் வித்தியாசத்தில் சுப.தங்கவேலன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இத்தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பாண்டிவேலு 6,667 வாக்குகள் பெற்றுள்ளது தேமுதிக தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பாண்டிவேலுக்கு சுயேட்சை சின்னமான கூடை வழங்கப்பட்டிருந்தது. கூடை மற்றும் முரசு சின்னம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்ததாகவும், இது முதியவர்கள் உள்ளிட்ட பலருக்கும் வித்தியாசம் காண முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஏற்கனவே இத்தொகுதி தேமுதிகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் சுப.தங்கவேலன் 927 வாக்குகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், கூடை சின்னத்திற்கு 6,667 வாக்குகள் கிடைத்துள்ளது தேமுதிகவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முரசு சின்னத்திற்கு விழ வேண்டிய வாக்குகள்தான் கூடைக்கு மாறி விட்டதாகவும் இதனாலேயே தங்களது வெற்றி கை நழுவி விட்டதாகவும் தேமுதிகவினர் புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.