Saturday, May 7, 2011

காஞ்சிரங்குடியில் புதிய தொழுகை பள்ளி திறப்பு


கீழக்கரை, மே 7&
காஞ்சிரங்குடி கடற்கரை அருகே புதிய தொழுகை பள்ளி திறக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கடற்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா உள்ளது. அதன் அருகில் புதிதாக கட்டப்பட்ட மக்கா மஸ்ஜித் தொழுகை பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு அமீர் தலைமை வகித்தார். சித்தார் கோட்டை தஸ்தகீர் புதிய பள்ளியை திறந்து வைத்தார்.
விழாவில் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், காஞ்சிரங்குடி இமாம் முல்லா ஹூசைன், இமாம் செய்யது முகம்மது, கீழக்கரை பழைய குத்பா பள்ளி இமாம் ஹைதர் அலி ஆகியோர் மார்க்க சொற்பொழிவு ஆற்றினர். டவுன் காஜி காதர் பக்ஸ் தொழுகை நடத்தி துஆ ஓதினார்.
முன்னதாக காஞ்சிரங்குடி துணை சேர்மன் முகப்பத்துல்லா வரவேற்றார். இமாம் யூசுப் நன்றி கூறினா

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.