Sunday, May 1, 2011

கீழக்கரையில் மே 4ல் புறா பந்தயம் துவக்கம்

கீழக்கரை, :
கீழக்கரையில் புறா பந்தயம், மே 4ம்தேதி துவங்குகிறது. இதையொட்டி முன்னோட்ட பயிற்சி போட்டிகள் நேற்று நடந்தன.
கீழக்கரை பகுதியில் புறாக்கள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. கேபிசி புறா கிளப் சார்பாக மே 4ம்தேதி முதல் புறா பந்தயம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக போட்டி பங்கேற்பாளர்கள் நேற்று கீழக்கரையில் புறாக்களுக்கு பயிற்சி போட்டியை நடத்தினர். பத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்றன. வீட்டுக்கு 2 புறா வீதம் பறக்கவிடப்பட்டது. வெளியே பறக்க விடும் புறாக்களில், நீண்ட நேரம் பறந்து வீடு திரும்பிய புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கேபிசி கிளப் தலைவர் சபீயுதீன், செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் கூறுகையில், ‘மே 4ம் தேதி தொடங்கி தொடர்ந்து ஒரு வாரம் கீழக்கரையில் புறா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட புறாக்கள் பங்கேற்கவுள்ளன. புறாக்கள் உள்ளூரிலேயே பறக்கவிட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு புறாவுக்கும், ஒரு நடுவர் நியமிக்கப்படுவர்‘ என்றனர்.
புறாக்கள் வளர்க்கும் ஜலால் கூறுகையில், ‘என் வீட்டு மொட்டை மாடியில் புறாக்கள் வளர்க்கிறேன். கூண்டுகள் அமைக்காமல் புறாக்களை அதன் போக்கிலேயே சுதந்திரமாக விட்டு விட்டேன். பச்சை பயறு, கோதுமை, கம்பு ஆகியவற்றை புறாக்களுக்கு உணவாக கொடுக்கிறேன். புறா பந்தயத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்‘ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.