Friday, May 6, 2011

கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் விபத்தில் காயமடைந்தவர் சாவு




கீழக்கரை,மே 6: கீழக்கரை அருகே முள்ளுவாடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் காயமடைந்த ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான புதன்கிழமை உயிரிழந்தார்.

கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் ஜேசுமரியஅந்தோனி மகன் இருதயராஜ் (36), சபரிமுத்து நாடார் மகன் மற்றொரு இருதயராஜ் (40) ஆகிய இருவரும் கீழக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது முகைதீன்மஸ்தான் மகன் ஆட்டோ டிரைவர் செய்யது இபுராம்சா (28) ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான் (65) மாயாகுளத்தைச் சேர்ந்த சாகுல்ஹமீது மகன் முகம்மதுதார்அல்புதீன் ஆகியோர் ஒரு ஆட்டோவில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஏர்வாடி நோக்கிச் சென்றனர்.

அப்போது இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ வேகமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஏர்வாடியைச் சேர்ந்த பெயிண்டர் சுல்த்தான் புதன்கிழமை உயிரிழந்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.