Monday, May 16, 2011

கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் தினமும் பாதிப்பு

கீழக்கரை மே. 16&
ஜெனரேட்டர் வசதி இல்லாததால் கீழக்கரை தலைமை தபால் நிலைய அலுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கீழக்கரை தலைமை தபால் நிலையம் தற்போது கணினி மயமாக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கணினி மூலம் மணியார்டர் அனுப்புதல், விரைவு தபால், பதிவு தபால் சேவை மற்றும் தொலைபேசி கட்டணம், மின் கட்டணம் செலுத்துதல், வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற அனைத்து சேவைகளும் நடைபெறுகின்றன. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் இச்சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது நகரில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுவதால் தபால் நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் வெளிநாட்டு பண பரிமாற்றம் போன்ற சேவைகள் பாதிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்களில் மின்சாரம் தடைபடும் நேரங்களில் ஜெனரேட்டர்கள் மூலம் பணியை தொடர்கின்றனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் தனியார் நிறுவனங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். இதனால் தபால் துறைக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கீழக்கரை தலைமை தபால் நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் நல பாதுகாப்பு கழக பொருளாளர் முகம்மது சாலிஹ் ஹூசைன் கூறுகையில், ‘பொதுமக்கள் நலன் கருதி இங்குள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்தால் இப்பிரச்னை தீரும். இது சம்பந்தமாக ஏற்கெனவே தபால்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளோம்’ என்றார்.

1 comment:

  1. KILAKARAI VISION 2020May 24, 2011 at 1:06 PM

    IFPOTHAIYA KALA KATTATHIL MATHIYA MANILA ARASUKALITAM IRUNTHU ITHU PONDRA KARIYANKALLKU NICHYAMAKA UTHAVI PERA MUDIYATHU. ENAWAY SETHAKATHI TRUST, SATHKU TRUST, KILAKARAI WELFARE TRUST PONDRA NALLA ULLANGALITAM UTHAVI KORALAM

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.