Saturday, May 7, 2011

சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கீழக்கரையில் போக்குவரத்து நெரிசல்



கீழக்கரை மே.7:
கீழக்கரையில் பிரதான சாலைகளில் இஷ்டம்போல் வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழக்கரையில் பிரதான சாலைகளில் ஒன்றான தபால் நிலையம் அமைந்துள்ள சாலையில் மூன்று வங்கிகளும் செயல்படுகின்றன.இந்த சாலையில் காலை 10 மணி முதல் சாலையின் இருபுறங்களிலும் ஆட்டோ,கார் மற்றும் மினி வேன்கள் ஆகிய வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சில வாகனங்களை நாள் கணக்கில் சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள், குறிப்பாக வங்கிகளுக்கு வரும் பெண்கள் சாலை ஓரங்களில் நடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சமூக சேவகர் தங்கம் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,‘‘ இந்த சாலையின் இரண்டு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி சாலையை ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் மட்டுமின்றி பொது மக்களும் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
காலை நேரங்களில் போலீசார் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.