Thursday, May 19, 2011

சிறந்த இளைஞர் மன்றங்களுக்கு விருதுகள்: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்


கீழக்கரை, மே 19: ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடந்துவரும் இளைஞர் மன்றங்களுக்கு சிறந்த விருதுகளும், சிறந்த இளைஞர் விருதுகளும் பெற விரும்புவோர் வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதன் ஒருங்கிணைப்பாளர் வி.ராபர்ட் ஜேம்ஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த இளைஞர் மகளிர் மன்ற விருதும், சிறந்த இளையோர் விருதும் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவிலான சிறந்த இளைஞர் அல்லது மகளிருக்குரிய விருதுகளுக்கும், சிறந்த இளையோர் விருதுகளுக்கும் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியைடந்து இருக்க வேண்டும்,

1.4.2010 முதல் 31.3.2011 வரை சிறப்பாகப் பணியாற்றிய அறிக்கையுடன் ஆதாரங்கள் இருக்க வேண்டும். சிறந்த இளையோர் விருதுக்கு ரூ. 5,000 ரொக்கமும், சான்றிதழும் வழங்கப்படும்.

சிறந்த இளைஞர் மற்றும் மகளிர் மன்ற விருதுகளுக்கு ரூ.1,000 ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

விருது பெறத் தகுதியுள்ளோர் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட நேரு யுவ கேந்திரா, பாரதி நகர், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறும் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 04567-230937 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் அச் செய்திக் குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.