

ராமநாதபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் அலியை ஆதரித்து பிரசாரம் செய்ய மத்திய அமைச்சர் வாசன் கீழக்கரை வந்த போதுஅவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
தேர்தல் முடிந்தவுடன் தூத்துக்குடி & கொழும்பு கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். அதே போல் ராமேஸ்வரம் & தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தும் துவங்குவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்தியா முழுவதும் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை ரூ.300 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கமும் இணைப்பது குறித்து ஆராயப்படு்ம் என்று அறிவித்தார்.
தற்போது தேர்தல் நடைபெற்று விட்டது எனவே மத்திய கப்பல் துறை அமைச்சர் வாச்ன் அவர்கள் வெறு்ம் அறிவிப்போடு நின்று விடாமல் அத்திட்டத்தில் கீழக்கரை கலங்கரை விளக்கத்தையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை கலங்கரை விளக்கம் இத்திட்டதில் இணைந்து விட்டால் கீழக்கரை கடற்கரை பகுதி சுத்தப்படுத்தப்பட்டு சுற்றுலா தலமாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.