Sunday, May 8, 2011

14.30 மணி நேரம் பறந்த புறா முதல் சுற்றில் வெற்றி !

வெற்றி பெற்ற புறாவுடன் ஹனீப்

கீழக்கரையில் தொடர்ந்து 14.30 மணி நேரம் பறந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த 4ந்தேதி கேபிசி புறா கிளப் சார்பாக புறா பந்தயம் தொடங்கியது.இந்த போட்டியில் சபியுல்லா,அபுபக்கர்,ஹனீப்,அப்துல் ஆகியோரின் புறாக்கள கலந்து கொண்டன.பல சுற்றுகள் நடைபெற்ற இப்போட்டியில் ஹனீபுக்கு சொந்தமான புறா 14.30 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது.இதையடுத்து இந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கேபிசி கிளப் தலைவர் சபியுதீன் ,செயலாளர் வலம்புரி செய்யது இப்ராகிம் மற்று நிர்வாகிகள் பந்தயத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வரும் 17.18,19 ஆகிய தேதிகளில் ஜோடி புறா போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.