Sunday, May 6, 2012

வறுமையை வென்று ஐஏஎஸ் ஆன கீழக்கரை பகுதி இளைஞர்! இந்தியாவில் 5வது இடம்



மத்திய தேர்வானையம் நடத்திய ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 5ம் இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்று எஸ்.கோபால் சுந்தர்ராஜ் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மாவிலா தோப்பு பகுதியை சேர்நத இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
விவசாயம் நலிவடைந்ததால் இவர்களின் குடும்பத்தார் இங்குள்ள நிலங்களை விற்று விட்டு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே கடம்பா நகரில் சில ஆண்டுகளுக்கு முன் குடியேறியது.

எல்.கே.ஜி முதல் 2ஆம் வகுப்பு வரை ராமநாதபுரம் லூயிஸ்லெவல் பள்ளியிலும்,3ம் வகுப்பு மென்னந்தி அரசு ஆரம்ம பள்ளியிலும்,

4வது வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை கீழக்கரை மாவிலாதோப்பு பள்ளியிலும்,9 முதல் 12ம் வகுப்பு வரை ராமநாதபுரம் செய்யதம்மாள் பள்ளியிலும் படித்தார்.கோவையில் உள்ள விவசாய கல்லூரியில் பிஎஸ்சி பட்டபடிப்பும்.எம் எஸ்சி நியுடெல்லி பல்கலையிலும் படித்தார்.
3 ஆண்டுகளுக்கு முன் தந்தை காலமானார். இந்நிலையில் இவரது மாமர்னார் ஓய்வு பெற்ற ஆசிரியர் மாரியப்பன் உதவியுடன் படித்து வந்தார்.

3 முறை ஐஏஸ் தேர்வில் முயற்சி செய்தி தற்போது ஐஏஎஸ் சாக தேர்வு பெற்று இந்திய அளவில் 5வது இடத்தை பிடித்துள்ளார் .

இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய கல்லூரியில்ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.


கீழக்கரை டைம்ஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

3 comments:

  1. வாழ்த்துக்கள் எஸ்.கோபால் சுந்தர்ராஜ்

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துக்கள் - MJS

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.