Wednesday, May 2, 2012

விடுமுறையில் சிறு தொழிலில் ஈடுபடும் பாராட்டுக்குறிய கீழக்கரை மாணவர்கள் !



பள்ளிகளுக்கு ஆண்டு விடுமுறை தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகள் சுற்றுலா செல்வது,நீச்சல் பயிற்சி ,நடனம் என்று பல்வேறு வகையில் விடுமுறை தினங்களை கழித்து வரும் சூழ்நிலையில் கீழக்கரை பகுதியில் இளம் பள்ளி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து தங்களின் வீடுகளின் அருகிலேயே சிறு கடைகளை நடத்தி வருகிறார்கள்.இதன் மூலம் உழைப்பின் அருமையை இளம் வயதிலேயே கற்று கொள்வதோடு வீணாக பொழுதை கழிக்காமல் இருக்கவும் வாய்ப்பாக அமைவதாக மாணவர்களை பாராட்டுகின்றனர்.

இது குறித்து அம்மாணவர்கள் கூறியதாவது,

காலை,பகல் நேரங்களில் வீடியோகேம்ஸ்,டிவி என்று பொழுது போக்குவதில் எங்களுக்கு விருப்பமில்லை.சிறு முதலீட்டில் இது போன்ற தொழில் செய்வது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆனாலும் மாலை நேரங்களில் விளையாடவும் படிக்கவும் தவறுவதில்லை என்றனர்...

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.