Friday, May 25, 2012

பிளஸ்2 தேர்வு!முஹைதீனியா பள்ளியில் அதிக‌மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு படங்கள்)




பட விளக்கம்:-பரிசு பெற்ற மாணவ‌ சகோதரிகள் தங்களது குடும்பத்தாருடன் அருகில் நகராட்சி துணை தலைவர் மற்று கவுன்சிலர்கள் மற்றும் முஹைதீனியா பள்ளி நிர்வாகிகள்

கீழக்கரை வடக்கு தெரு முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் பயின்ற சகோதர மாணவிகள் மிஸ்பாஹ் பாத்திமா பள்ளி அளவில் 1161/1200 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும் கீழக்கரை அளவிலும் முதலிடம் பெற்றார் ,இவருடைய சகோதரி மிஸ்பாஹ்ஆயிஷா 1149/1200 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அள்வில் இரண்டாம் இடம் பெற்றார். முகம்மது ஹம்ஷா பாஹிமா மூன்றாமிடம் பெற்றார்.

இவர்களை பாராட்டி கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் கீழக்கரை நகராட்சி துணை தலைவர் , கவுன்சிலர்கள் இணைந்து நடத்திய பாராட்டு விழா முஹைதீனியா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


வடக்குத்தெரு ஜமாத் தலைவர் பசீர் தலைமை வகித்தார். நகராட்சி துணை தலைவர் ஹாஜா முகைதீன்,கவுன்சிலர்கள் அன்வர் அலி,முகைதீன் இப்ராகிம்,இடிமின்னல் ஹாஜா,அரூசியா,சாகுல் ஹமீது மற்றும்

முன்னாள் கவுசிலர் வேல்சாமி,மக்கள் நல பாதுகாப்பு கழகதலைவர் தமீமுதீன்,பொருளாளர் சாலிஹ் ஹீசைன்,

கல்விக்குழு உபதலைவர் முகம்மது ரபீக் சாதிக்,துணை செயலாளர் முகைதீன் இப்ராகிம், கீழக்கரை காவல் நிலைய எஸ்.ஐ.கார்மேகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் துணை முதல்வர் சேதுபதி வரவேற்றார்.முதல்வர் ரஹ்மத்நிஷா நன்றி கூறினார்.

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.