Sunday, November 4, 2012

கீழக்கரை 18 வாலிபர் தர்ஹாவில் கந்தூரி விழா !

கீழக்கரை சாலைத்தெரு 18 வாலிபர் தர்ஹாவின் கந்தூரிவிழா நடைபெற்றது.
கீழக்கரை சாலைதெரு 18 வாலிபர் தர்ஹாவில்  கந்தூரி விழா அக்.16ல் கொடி ஏற்றத்துடன் துவங்கி 18 நாள் மவுலீது ஓதப்பட்டு நேற்று கடைசி மவுலீது ஓதி அப்துல்சலாம் ஆலிம் உலக நன்மைக்காக துஆ செய்தார்.

விழா முடிவு பெற்றதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு தப்ரூக் (நெய்சோறு) வழங்கப்பட்டது.தலைவர் சாகுல்ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் சித்திக்அலி, பொருளாளர் ஜகுபர்சாதிக், விழா கமிட்டி தலைவர் சீனிமுகமதுஆலிம் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை விழா கமிட்டி உறுப்பினர்கள் ஹபீப் முகமது தம்பி, சுல்தான், அல்தாப்ஹூசைன், காதர் மீராசாகிபு, ஜப்பார் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.