Tuesday, November 27, 2012

கீழ‌க்க‌ரையில் நாளை(28 ந‌வ)காலை 9முத‌ல் மாலை 5 வ‌ரை மின் த‌டை!மின்சார‌த்துறை அறிவிப்பு!

 
கீழக்கரையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கீழக்கரை, ஏர்வாடி த‌ர்ஹா, முஹம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், காஞ்சிரங்குடி,  மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் புத‌ன்கிழ‌மை(ந‌வ‌.28) காலை 9 மணி முதல் மாலை 5 ம‌ணி வரை மின் தடை ஏற்படும் என்று ராமநாதபுரம் உதவி செயற்பொறியாளர் க‌ங்காத‌ர‌ன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர் செய்யது இப்ராகிம் கூறுகையில் , ஏற்கென‌வே தின‌மும் 16 ம‌ணி நேர‌த்திற்கு மேல் மின் த‌டை ஏற்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து.அந்த‌ ச‌ம‌ய‌த்தில் பராம‌ரிப்பு ப‌ணிக‌ளை மேற்கொள்ளலாம்.இத‌ற்கென‌ த‌னியாக‌ மின்த‌டை ஏற்ப‌டுத்த‌ வேண்டுமா? என்றார்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.