Sunday, November 18, 2012

கீழ‌க்க‌ரையில் மின்சார‌ விப‌த்து!மின்சார‌ ஊழிய‌ர் உயிர‌ழந்தார்!


கீழக்கரையில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் பலத்த காயமடைந்தார்.
 கீழக்கரையைச் சேர்ந்த பாலாறு மகன் கோவிந்தன். இவர் கீழக்கரை மின்வாரிய அலுவகத்தில் ப‌ணியாற்றுகிறார்.
வியாழக்கிழமை இரவு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள டிராண்ஸ்பார்ம‌ரில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக அவர் மேலே ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மருத்துவர்கள் ஆலோசனையின்பேரில், அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.அங்கு சிகிச்சை பல‌னின்றி உயிர‌ழந்தார்
 இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.