Friday, November 23, 2012

சாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோரிக்கை

சாய்ந்து நிற்கும் மின்கம்பம் மாற்றித்தர மக்கள் கோரிக்கை
 
கீழக்கரை வடக்குத்தெரு கொந்தகருணை அப்பா தர்ஹா ரோட்டில் தர்ஹாவின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்து தர்ஹாவின் சுற்றுச்சுவரின் தாங்களில் நிற்கிறது. கீழே விழுந்தால் பலத்த சேதம் ஏற்படும் நிலை உள்ளது. உடனே மின்கம்பத்தை மாற்றித் தரவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வடக்கு தெருவில் மகான் கொந்தகருணை அப்பா தர்ஹா உள்ளது. இப்ப‌குதிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தர்ஹாவின் அருகில் உள்ள மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது.
இந்த மின்கம்பம் தர்ஹா சுற்றுச்சுவரில் சாய்ந்து நிற்கிறது. இதனால் சுற்றுச் சுவரும் கீழே விழும் நிலை உள்ளது. இதனால் அருகில் கடை வைத்திருப்பவர்கள் மற்றும் அப்ப‌குதி ம‌க்க‌ளுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படும் அபாயம் உள் ளது.
 
இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி நகர் செயலாளர் பந்தே நவாஸ் கூறுகையில், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சாய்ந்த மின்கம்பத்தை மாற்றித் தரவேண்டும் என்று மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தோம். புகார் கொடுத்த இரண்டு நாளில் அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றனர். அத்துடன் சரி. எந்த நடவடிக்கையும் இல்லை. மின்கம்பம் விழுந்து பலத்த சேதம் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை மாற்ற வேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.