Thursday, March 17, 2011

மாணவனை மிதித்ததாக கீழக்கரை பள்ளி தலைமை ஆசிரியர் மீது புகார்!

கீழக்கரை.மார்ச்.17.ராமநாதபுரம் மாவட்டம் சின்ன மாயாகுளத்தை சேர்ந்த ஜெயபால் மகன் ஆமோஷ் ராஜா(13). இவர் கீழக்கரையில் உள்ள ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை 10 மணிக்கு வகுப்பு ஆசிரியரின் உத்தரவுப்படி வெளியில் உட்கார்ந்து படித்தார். அங்கு வந்த தலைமை ஆசிரியர் அசன் இபுறாகிம், எவ்வித காரணமும் இல்லாமல் மாணவரை முதுகில் தாக்கியதுடன்,செருப்பு காலால் மிதித்ததாகவும் மாணவர் தரப்பில் கூறப்படுகிறது.கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவரிடம் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

தலைமை ஆசிரியர் அசன் இபுறாகிம் கூறியதாவது:மாணவர் சரியாக படிக்காததால் வகுப்பு ஆசிரியர் வெளியே உட்கார வைத்திருந்தார். மாணவனுக்கு அறிவுரை வழங்கி உள்ளே அனுப்பினேன். மாணவரை காலால் மிதித்ததாக கூறப்படுவது தவறான தகவல், என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.