Monday, March 7, 2011

வெளிநாட்டிலிருந்து வந்து கொலை செய்த கணவன் கோர்டில் சரண்


திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவர், சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த பூமா தேவி (21)யை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதுகுளத்தூர் அருகே மருதகத்தை சேர்ந்த சுதா (25)வை, கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது திருமணம் செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இவரது முதல் மனைவி கடந்த பிப்., 28ல் மர்மமான முறையில் வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்டார்.


ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீசார் விசாரித்தனர். கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்துள்ளது தெரிய வந்து, போலீசார் தேடினர். இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி, பரமக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், "மனைவி தவறான நடத்தையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலால், வெளிநாட்டில் பணியில் கவனம் செலுத்த முடியாமல், திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தேன். அங்கிருந்து ஊருக்கு வந்து யாருக்கும் தெரியாமல் தங்கினேன். முதல் முறை கொலை செய்ய முயற்சித்த போது மூத்தமகன் வீட்டில் இருந்ததால், திரும்பி சென்று விட்டேன். இரண்டாவது முறை சென்ற போது குளித்து விட்டு பூமாதேவி தனியாக வெளியே வந்தார். அப்போது அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி விட்டேன்,' என தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.