Monday, March 21, 2011

ராமநாதபுரத்தில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜவாஹிருல்லாவை வெற்றி பெற செய்வோம்! கீழக்கரை தமுமுகவினர் பேட்டி!




தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா




கீழக்கரை முஜீப்


கீழக்கரை .மார்ச்.21ராமநாதபுரம் தொகுதியில் முக்கிய கட்சிகளான திமுக கூட்டணியில் காங்கிரசும் ,அதிமுக கூட்டணியில் தமுமுக போட்டிடுவதாக அறிவிக்கபட்டுள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அறிவிக்கப்பட்டுள்ளார். இநிலையில் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதில் கீழக்கரை நகராட்சி முக்கிய இடத்தை பெறுகிறது.

இதுகுறித்து தமுமுகவை சேர்ந்த பிரமுகர் கீழக்கரை ஹசன் மற்றும் கீழக்கரை முஜீப் ஆகியோர் கூறுகையில்,
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் என்று அறிவிப்பு வந்தவுடன் இப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை எங்களால் உணர முடிந்ததால் சொல்கிறோம்.பேராசிரியரின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது

மேலும் பல்லாண்டு காலமாக சமுதாய பணியில் தன்னை அர்பணித்த பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் வெற்றி பெற்றால் நிச்சயம் பல்வேறு துறைகளிலும் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் பகுதியை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார் என்பதில் ஐயமில்லை .இதற்கு முன் இப்பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் செய்ய தவறிய மக்கள் நல பணிகளை நிச்சயம் நிறைவேற்றுவார்.எனவே பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை அமோக வெற்றி பெற செய்வோம் என்ற்னர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.