Wednesday, March 23, 2011

குடி போதையில் வாக்குசாவடிக்கு வராதீர்கள்! மாணவ,மாணவிகள் ஊர்வலம்.





கீழக்கரை.மார்ச்.23.செய்யது ஹமீதா கலை மற்று்ம் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவிகள் தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலமாக கீழக்கரை கடற்கரையிலிருந்து ஏர்வாடி முக்கு ரோடு வரை பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 18வயது்க்கு மேற்பட்டட இந்திய குடிமக்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். வாக்குசாவடி்க்கு உரி்ய ஆவணங்களோடு செல்ல வேண்டும்.வாக்குச்சாவடியில் பதற்றமில்லாத சூழ்நிலை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.முறையற்ற வாக்குபதிவை தடுப்போம்.குடிபோதையில் வாக்குசாவடிக்கு செல்ல வேண்டாம் எனபதாக எழுதிய பதாகைகளை கையி்ல் ஏந்தியவாறு சென்றனர்.

150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆங்கிலத்துறை தலைவர் நெல்சன் டேனியல் ,உடற்கல்வி இயக்குநர் மருதாச்சல் மூர்த்தி மற்று்ம் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.