Thursday, March 31, 2011

கல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது! கீழக்கரை கல்லூரி விழாவில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேச்சு!



கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரி மாணவியர் பேரவை நிறைவு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை நிகழ்த்தினார்.விழாவில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பேசியதாவது,சமுதாயம் முன்னேற்றமடைய ஆண்கள் மட்டும் படித்தால் போதாது பெண்களும் படி படித்திருக்க வேண்டும் .பெண்கள் கல்வியை கரம் பிடிக்க வேண்டும் .கல்வி மட்டுமே பெண்களை விவாகரத்து செய்யாது்.மேலும் மதி்ப்பெ்ண் என்ற சொல்லிலும்் பெண் என்ற வார்த்தையே வருகிறது மாணவிகளே அதிக மதிப்பெண்களை பெறுவது சொல்லுக்கு பொருத்தமாக உள்ளது.பெண்கள் மென்மையானவர்கள்.ஆனால் அந்த தண்ணீர் சுனாமியாக மாறிவிடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக ரபியா மசூமா,பரிதா பானு ஆகியோர் மாணவியர் பேரவைக்கான அறிக்கையை வாசித்தனர்.கவிமணி அப்துல் காதர் தலைமையுரையாற்றினார்.சீதக்காதி டிரஸ்ட் செயலாளர் காலித் புஹாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.