Thursday, March 17, 2011

கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள ! ஆய்வு பணி தொடங்கியது

2008ல் நிறம் மாறிய கடல்



2009ல் உள் வாங்கிய கடல்


கடல் சீற்றம்

கீழக்கரை.மார்ச்.17

தமிழகத்தில் சுனாமிக்கு பிறகு கீழக்கரை கடலில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.நிறம் மாறுதல் ,கடல் சீற்றம்,கடல் உள்வாங்குதல் போன்றவை ஏற்படுகிறது.கடந்த சில நாட்களுக்கு மு்ன் ஜப்பானில் சுனாமி சுழன்றடித்த அதே நாளில் கீழக்கரை பகுதி கடல் சிறிது தூரம் உள்வாங்கியது.மேலும் சென்ற முறை சுனாமி ஏற்பட்ட போது இதே போல் நிகழ்ந்தது.இது ஒரு புறமிக்க மன்னார் வளைகுடாவை சேர்ந்த இப்பகுதியில் மீன் வளம் குறைந்து வருவதாகவும் ,பவள பாறைகள் அழிக்கப்பட்டு வருவதையும் கடல் ஆராய்ச்சியாளர்கள் கவலையுடன் சுட்டி காட்டுகின்றனர்.

இந்நிலையில் தற்போது மத்திய அரசின் இந்திய நிலஅளவை அமைப்பு நிறுவனம் கடல் சீற்றத்தை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும் மேற்கு வங்காளத்திலிருந்து குஜராத் வரை கடல் மட்டம் குறித்து ஆய்வு பணி நடத்துகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, கடல் நிலை குறித்து ஆய்வு செய்கின்றனர். கடல் மட்டம், கடலோர பகுதி அரிப்பு, கடல் சீற்றம், கடல் மட்டத்தின் உயரம் என பல்வேறு விதமாக ஆய்வு செய்கின்றனர்இதற்காக ஒரு குழு சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கடலோர மாவட்டங்கள் வழியாக ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது. நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியிலிருந்து, கருவிகள் மூலம் கடல் மட்ட ஆய்வு பணியை தொடங்கினர். இப்பணியோடு சேர்த்து இப்பகுதி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறித்து்ம் ஆய்வுகள் மேற்கொள்ள பட வேண்டு்ம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது, உலகின் பல பகுதிகளி்ல் பாதிப்பை ஏற்படுத்திய சுனா்மி இப்பகுதியை தாக்காமல் பாதுகா்ப்பதில் இப்பகுதியில் அமைந்திருக்கும் குட்டி தீவுகள் மற்றும் பவள பாறைகள் பெரும் பங்கு வகிக்கிறது.மேலு்ம் இப்பகு்தி கடலி்ல் ஏற்படும் மாற்றங்கள் குறிதது ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.




No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.