Tuesday, November 6, 2012

கர‌ண்ட் இல்லை!க‌ண‌க்கில்லா க‌ட்ட‌ண‌ம் உண்டு!மின் க‌ண‌க்கீட்டில் குள‌றுப‌டி!

கீழக்கரையில் மின்கணக்கீட்டில் குளறுபடி நிலவுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மின்வாரியம் சார்பில் வீடு வீடாக சென்று மின் கணக்கு எடுத்து, அதன்படி பயனாளிகள் பில் தொ கை செலுத்துவது வழக்கம். ஆனால் தற்போது கீழக்கரை மின்வாரியத்தில் உள்ள கணக்கீட்டாளர்கள் சரியான முறையில் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பது இல்லை. டோர்லாக் என்று குறிப்பிட்டு முந்தய மாதத்தில் போட்ட தொகையை மீண்டும் கட்ட சொல்கின்றனர். மேலும் மீட்டரில் ப‌திவாகியிருக்கும் கணக்கை பார்க்காமல் தங்களின் எண்ணத்திற்கு ஏற்ப தொகையை நிர்ண‌யித்து செல்வதால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

கவுன்சிலர் சாகுல்ஹமீது கூறுகையில்,
எனது வார்டு பகுதியில் உள்ள வீடுகளில் சரியான முறையில் மின்கணக்கீடு எடுப்பதில்லை. ஒருமுறை மின்கட்டணம் அதிகமாக வந்தால், மின் சிக்கனத்தை கடைபி டிக்கிறோம். ஆனால், கணக்கீட்டாளர்கள் கடந்த முறை செலுத்திய தொகையை மீண்டும் செலுத்தும் படி கூறுவதால், கூடுதல் பணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சிலர் டோர்லாக் என்று எழுதி விட்டு சென்று விடுகின்றனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால், முறையாக பதில் அளிக்க மறுக்கின்றனர். இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர், என்றார்.

இது குறித்து மின் ப‌ய‌னீட்டாள‌ர் பாசில் கூறுகையில்,‌ மாத‌ந்தோறும் தின‌மும் ப‌ல‌ ம‌ணி நேர‌ம் மின்சார‌ம் துண்டிக்க‌ப்ப‌டுகிற‌து. ஆனால் க‌ட்ட‌ண‌ம் ம‌ட்டும் அதிக‌மாக‌ வ‌ருகிற‌து.இது எப்ப‌டி சாத்திய‌ம்? உட‌ன‌டியாக இதை ச‌ரி செய்து முறையான‌ க‌ட்ட‌ணம் வ‌சூலிக்க‌ வேண்டும் என்றார்
 

3 comments:

  1. Aithukkunga iuvalau kaasu vanthuirukkunu eb la kaeta ainga computer poi sollathun themura vaera paesuvanga. Intha vesaiyathaium newsla saethukunga.

    ReplyDelete
  2. nagarigama karuthu solla varthai illai,

    ReplyDelete
  3. nagarigama karuthu solla ennal mudiya villai

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.