Sunday, November 10, 2013

காலியாக உள்ள 15வது வார்டு கவுன்சிலர் பதவி! இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?


பைல்(பழைய படம்) 

சில மாதங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி  15வது வார்டு பெண் கவுன்சிலர் மாஜிதா பீவி காலமானதை தொடர்ந்து அப்பகுதியின் கவுன்சிலர் பொறுப்பு காலியாக உள்ளது.


இது குறித்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு கழகத்தை சேர்ந்த செய்யது இப்ராஹிம் எ கூறியதாவது,
இப்பகுதியில் மக்கள் பிரதிநிதி இல்லாததால் மக்கள் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.இதனால் அப்பகுதிக்கான குறைகளை பொதுமக்களே நேரடியாக நகராட்சிக்கு சென்று குறைகளை தீர்த்து கொள்ளும் நிலை உள்ளது. இதுவரை இதற்கான தேர்தலும் அறிவிக்கப்படாமல் உள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்   வார்டுக்கான வாக்காளர் பட்டியலை சரிபார்த்து புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை நடத்தி தேர்தல்அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.