Tuesday, November 5, 2013

கீழக்கரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கணக்கெடுப்பு குறித்து ஆலோசனை!



கீழக்கரையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் பற்றி கணக்கெடுத்து பட்டியலை சரி செய்வது குறித்து கீழக்க்கரை நகராட்சியில் நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா, கமிஷனர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இது குறித்து நகராட்சி தலைவர் ராவியத்துல் கதரியா கூறுகையில் 


தமிழக அரசின் உத்தரவின் பேரில் கீழக்கரை நகராட்சியில்  வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் சரிபார்க்கப்படுகிறது.
அதற்கான பணிகளை நடைபெற்று கொண்டிருக்கிறது .இதன் மூலம் பட்டியல் சரி செய்யப்பட்டு விடுபட்டோர் சேர்க்கப்பட்டு தமிழக அரசின் உதவி திட்டங்களான முதியோர் ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு நல திட்டங்களில் பயன் பெற முடியும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.