Friday, November 1, 2013

முஸ்லிம் பொதுநல சங்கம் - சமுதாய நல அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம்!



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்குதெரு பகுதியில் உள்ள முஸ்லிம் பொது நலசங்கம் மற்றும் சமுதாய நல அறக்கட்டளை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு கீழக்கரை முஸ்லிம் பொதுநல சங்க தலைவர் செய்யது நியாஸ்கான் தலைமை வகித்தார். செயலாளர் கபீர், துணைச் செயலாளர்கள் சகீர், சுபியான் மற்றும் நிர்வாகி ஹனீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் மற்றும் பொதுவான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மருத்துவர் சித்ராதேவி கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தார். உதவியாளர்கள் கவிதா, பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர். இம்முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ரத்தவகை கண்டறியும் முகாம் மருத்துவர் பகுருதீன் தலைமையிலும் அதனை தொடர்ந்து ஆங்கில பேச்சு பயிற்சி சஹிருதீன் தலைமையிலும் நடைபெற்றது.

 இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  

1 comment:

  1. மேன் மேலும் நமது முஸ்லிம் பொதுநல சங்க பணிகள் சிரக்க ஏக இறைவனிடம் துவா செய்யுமாரு கேட்டு கொள்கிரோம்..
    website: www.mpnskilakarai.blogspot.com

    . ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.