Sunday, January 20, 2013

கீழ‌க்க‌ரையில் போலியோ சொட்டு ம‌ருந்து முகாம்! ந‌டிகர் விவேக் ப‌ங்கேற்பு!


தமிழ் நாட்டில் இன்று போலியோ  சொட்டு ம‌ருந்து தின‌ம் அனுச‌ரிக்க‌ப்ப‌டுகிற‌து. சுமார் 40,000 -க்கும் மேற்பட்ட சொட்டு மருந்து மையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கியமான இடங்களில் பிரத்தியேகமாக நிறுவப்பட்டு இன்று குழ‌ந்தைக‌ளுக்கு சொட்டு மருந்து வழங்கப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

கீழ‌க்கரையில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் அமைக்க‌ப்ப‌ட்டு இருந்த‌ போலி சொட்டு ம‌ருந்து முகாம்க‌ளில் ஏராள‌மானோர் த‌ங்க‌ளது குழ‌ந்தைக‌ளை அழைத்து வந்து சொட்டு ம‌ருந்து வ‌ழ‌ங்கின‌ர்.

கீழ‌க்க‌ரை (தில்லையேந்த‌ல் ப‌ஞ்சாய‌த்து) 500 பிளாட் ப‌குதியில் இன்று  ரோட்ட‌ரி ச‌ங்க‌ம் சார்பில் அப்ப‌குதியில் குழ‌ந்தைக‌ளுக்கு சொட்டு ம‌ருந்து வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.சத‌க் டிர‌ஸ்டின் த‌லைவ‌ர் ஹ‌மீது அப்துல் காத‌ர் ,ச‌த‌க் பாலிடெக்னிக் முத‌ல்வ‌ர் அலாவுதீன்,ந‌டிக‌ர் விவேக் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் இந்நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.