Monday, January 28, 2013

கீழக்கரை கல்லூரியில் மீலாத் நிக‌ழ்ச்சி!


கீழக்கரை முகம்மது அறக்கட்டளையின்கீழ் இயங்கும் முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, முகம்மது சதக் பொறியியல்கல்லூரி, செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி மற்றும் ராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி இணைந்து நபிகள்நாயகம் பிறந்த நாள் விழா (மீலாத்) பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது.

முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல்காதர் தலைமை வகித்தார், கல்லூரி தாளாளர் யூசுப்சாகிபு, பொறியியல் கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன் சாதலி, ஹமீதியா ஆண்கள் மேல்நிலைபள்ளி ஆசிரியர்(ஓய்வு) முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறித்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார். கரூர் சிந்தாமணிபட்டி தாருல்உலூம் அரபிக்கல்லூரி நிறுவனர் சிராஜூதீன்அகமது ரஷாதி, கீழக்கரை மேலத்தெரு புதுப்பள்ளிவாசல் கத்தீப் முகம்மது மன்சூர்அலி நூரி பேசினர். கல்லூரி இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா நன்றி கூறினார்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.