Friday, March 11, 2011

கீழக்கரை அருகே தொடரும் விபத்துகள்!பேய் உலாவுவதாக வதந்தி


2009ல் நடந்த விபத்து



சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்து

சில வாரங்களுக்கு முன் நடந்த விபத்து


விபத்துகள் நடைபெறும் இடம்

கீழக்கரை.மார்ச்.10.கீழக்கரையிலிருந்து ராமாநாதபுரம் செல்லும் சாலையில் வண்ணாந்துறை அருகே கீழக்கரை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள சாலை வளைவில் வலப்புறம்,இடப்புறம் என்று சாலையின் இருபுறங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட விபத்துககள் நிகழ்ந்துள்ளன.

சில வாரங்களுக்கு முன் வேன் கவிழ்ந்து 6பேர் படுகாயமடைந்தனர்.தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படுகிறது.பஸ்,லாரி,டிராக்டர்,பைக்,என்று விபத்தில் சிக்காத வாகனங்களே இல்லை என்ற அளவுக்கு விபத்துக்கள் நடந்துள்ளது.இவ்விபத்துகளில் பலர் உயிரழந்துள்ளனர்.நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

அரசாங்க நிர்வாகமும் விபத்து நடைபெற்ற இடத்தில் எச்சரிக்கை பலகைகள்,வேக தடுப்புகள்,சாலைகளின் இருபுறமும் மைல் கல்கள் ஊன்றப்பட்டு அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் என்று விபத்தை தவிற்ப்பதற்கு பல் வேறு முறைகளை கையாண்டாலும் விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் தற்போது கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.அப்பகுதியை வாகனங்கள் கடக்கும் போது சல்,சல், என்று சலங்கை ஒலி கேட்பதாகவும்,இரவு நேரம் மல்லிகை மணம் வீசிவதாகவும்,அலறல் சத்தம் கேட்பதாகவும் கட்டு கதைகளை அளந்து விடுகின்றனர்.

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த செய்யது அப்தாகிர் கூறியதாவது, பேய்,ஆவி என்பதெல்லாம் வெறும் வதந்தியாகும்.வளைவில் அமைந்திருக்கும் சாலை சீராக இல்லை என்பதாலும்,வளைவு பகுதியில் வாகனங்கள் வேகமாக வருவதாலும் தான் விபத்துகள் ஏற்படுகின்றன.இப்பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிக அளவில் வேகத்தடைகளை நிறுவ வேண்டும் மேலும் தற்காலிகமாக போக்குவரத்து காவலர் ஒருவரை அப்பகுதியில் நியமிக்க வேண்டும் .குறிப்பாக இப்பகுதியை விபத்து பகுதி என்று அறிவிக்க வேண்டும் என்றார்.
.
பேய்,பிசாசு என்று வதந்திகளை பரப்புவது வாகன ஓட்டுநர்களுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி மேலும் அதிக விபத்துகளுக்கு வழி வகுக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

2 comments:

  1. பேய்கள் உலாவுவதற்கு வாயப்பு இல்லை கீழக்கரையில் தற்போது மது பழக்கம் அதிகமாகிவிட்ட காரணத்தினால் ஓட்டுனர்கள் நிலை தடுமருகிரர்கள் அதை பேய்கள் செய்வதாக திசை திருப்புகிறார்கள்.


    கருத்து
    கீழை யாசர்

    ReplyDelete
  2. peya entha pepaya sonnan.........kalil mull kuthum..udane mull kuthiduchunu solvan..evanave mul methu kalaivaipan..mul kuthathane seium koosava seium....namma aalkaluku thavaru siethavan..eppa thavari unarthan..sollungal..parpom.......antha valaiwho..mosamana valaiuthan..............antha idathil speedai kuraithale antha pakkam poravangaluku..aausu gudidum.....

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.