Thursday, June 28, 2012

டெங்கு காய்ச்சல்!கீழக்கரையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு,வீடாக ஆய்வு


கீழக்கரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து சென்னை பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் சரவணன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட துணை இயக்குநர் உமா மகேஸ்வரி மற்றும் திருப்புல்லானி பொது சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் ராசீக்தீன் உள்ளிட்ட குழுவினர் கீழக்கரை நகர் முழுவதும் வீடு,வீடாக சென்று ஆய்வு செய்து பொது மக்களுக்கு டெங்கு தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.


இது குறித்து பொது சுகாதாரத்துறை மாவட்ட துணை இயக்குநர் உமா மகேஸ்வரி கூறியதாவது,
கீழக்கரையில் டெங்கு மற்றும் கிருமிகாய்ச்சல் அதிகம் பரவுவதாக கருத்து நிலவுவதால் நகர் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நல்ல முறையில் பய்ன்படுத்தி தாங்கள் வீட்டிற்குள் முக்கியமாக சமையல் அறை மற்றும் பாத்ரூம்களில் கொசு மருந்து அதிப்பதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் குடிதண்ணீரை இரண்டு நாட்களுக்கு மேல் தேக்கி வைக்க வேண்டாம் ,குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்.தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு அழித்தால் டெங்குவை விரட்டிடலாம் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.