Monday, June 25, 2012

ஊருக்குள் மின் க‌ட்ட‌ண‌ அலுவ‌ல‌க‌ம்!ப‌ணி விரைவுப‌டுத்த‌ எஸ்டிபிஐ வ‌லியுறுத்த‌ல் !


எஸ்டிபிஐ கீழ‌க்க‌ரை கிளை சார்பாக‌ செய‌ற்குழு கூட்ட‌ம் ந‌க‌ர் தலைவ‌ர் செய்யது அபுதாகிர் தலைமையில் ந‌டைபெற்ற‌து.ந‌க‌ர் செய‌லாள‌ர் அப்துல் ஹாதி வ‌ர‌வேற்றார்.கூட்ட‌த்தில் நிறைவேற்றிய‌ தீர்மாண‌ங்க‌ள் கீழ் வ‌ருமாறு..

கீழக்கரைக்கு தனி கமிஷனர் நியமிக்க வேண்டும்,கீழ‌க்க‌ரை ந‌க‌ராட்சியில் புதியதாக பதவியேற்று முத‌ல் கூட்ட‌த்தில், முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டும் கிடப்பில் உள்ள ஊருக்குள் மின்சார வசூல் மையம்(நகர் புதிய பேருந்து நிலையத்தில்) அமைக்கும் பணியை துரிதமாக நிறைவேற்ற வேண்டும்,(தற்போது வண்ணாந்துறை அருகே செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது) .கீழக்கரை அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் மயானவாடிக்கு சுற்று சுவர் கட்ட வேண்டும், அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர் பணியிடத்தை நிரப்பி,ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

துணை தலைவ‌ர் அபுப‌க்க‌ர் சித்தீக் ந‌ன்றி கூறினார்.

1 comment:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 25, 2012 at 9:25 PM

    தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது. பொது அமைப்புகள் சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து தீவிர முயற்சி எடுக்க வேண்டும். காரணம் நமது நகரின் எத்தனையோ முக்கிய பிரச்சனைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான் உள்ளது சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கீழக்கரை தாலுகா அந்தஸ்து உட்பட.

    எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். அறிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கலேன். நமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எங்கே இருக்கிறார்?
    சொல்லுபவர்களுக்கு ஒரு கிலோ மாங்காய் சூடை மீன் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.