Thursday, August 29, 2013

கீழக்கரை ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளாக மாணவர்கள் பதவியேற்பு!


சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "துரோணாச்சாரியர்' விருது வழங்கப்பட்டது

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், ரோட்டராக்ட் சங்க, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் அலாவுதீன் வரவேற்றார்.


ராமநாதபுரம் ரோட்டரி முன்னாள் ஆளுநர் சுகுமார், தலைவர் லோகநாதன், செயலாளர் ராஜா, கீழக்கரை ரோட்டரி தலைவர் டாக்டர் ராசிக்தீன், செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் இன்ஜி., ஆசாத் உட்பட பலர் பங்கேற்றனர். ரோட்டராக்ட் தலைவராக மூன்றாம் ஆண்டு மாணவர் யாசீர் அகமது, செயலாளராக சரவணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.
 சிறப்பாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "துரோணாச்சாரியர்' விருது வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆலோசகர் மரியதாஸ், முன்னாள் தலைவர் தவ்பீக் அலி செய்தனர்

விருது பெற்ற ஆசிரியர்கள் விபரம்
 ஹமீது நிசா - தலைமையாசிரியை, ஹமீதியா தொடக்கப் பள்ளி, கீழக்கரை.

 ரெஹ்னா ஜான் - வினாயகம் பள்ளி, இராமநாதபுரம்.

 நாகராஜ் - N.C.C மேஜர் கமாண்டர், முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கரை 

மணிமேகலை - திருப்புல்லாணி ஒன்றிய தொடக்கப் பள்ளி

. ஜீனத் பேகம் - சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி, கீழக்கரை 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.