Monday, August 26, 2013

கஞ்சா பறிமுதல்!பெண் உள்பட 2 பேர் கைது!2பேர் தப்பி ஓட்டம்


கஞ்சா பறிமுதல்!பெண் உள்பட 2 பேர் கைது!2பேர் தப்பி ஓட்டம்

கீழக்கரைக்கு கஞ்சாவை கடத்தி வந்துள்ளதாக கிடைத்த தகவலில் பேரில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீசாரின் நடவடிக்கையில் கீழக்கரையை சேர்ந்த நல்ல இப்ராஹிம்(58),மற்றும் அவருக்கு கஞ்சாவை எடுத்து வந்த மதுரை வரிச்சியூர் அருணாசலம் மனைவி மாரியம்மாள்(65) ஆகியோரை பிடித்தனர்,இவர்களிடமிருந்து 3.900கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் அங்கிருந்து 2 பெண்கள் தப்பி ஓடினர்.

மேலும் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

இவர்களிடம் விசாரணை செய்ததில் தப்பி ஓடியவர்கள் மதுரை முனிச்சாலையை சேர்ந்த ஜெயராணி மற்றும் பெருமாயி என்பது தெரிய வந்தது. இவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் கென்னடி கொடுத்த புகாரின் பேரில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேசன்,எஸ்.ஐ ரத்தினவேல் ஆகியோர் பிடிபட்ட இரண்டு பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நல்ல இப்ராஹிம் சமீபத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.