Wednesday, August 28, 2013

கீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8அடி சாரை பாம்பு!


கீழக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட 8அடி சாரை பாம்பு
கீழக்கரை அருகே சின்ன ஏர்வாடி பகுதியில் செல்வராஜ் என்பவரது வீட்டில் பின்புறம் வீடு கட்டுவதற்காக  செங்கல் அடுக்கியிருந்த பகுதியில் மஞ்சள் சாரை பாம்பு இருப்பதை கண்டார் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வனசரகர் ஜெயராமன் உத்தரவின் பேரில் வனவர் இன்னாசி முத்து வனக்காப்பாளர் முத்துகுமரன் வேட்டை தடுப்பு காவலர்கள் மகேந்திரன் அழகர் சாமி ஆகியோர் அங்கு விரைந்து 8 அடி நீள சாரை பாம்பை பிடித்தனர்..பின்னர் திருப்புல்லாணி கோரைகோட்டம் சதுப்பு நிலகாட்டில் விட்டனர்.
 
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.