Monday, August 12, 2013

கீழக்கரை அருகே வீட்டில் 5 அடிநீளமுள்ள செந்நாகம் பிடிபட்டது!


கீழக்கரை அருகே வீட்டு கிணற்றில் 5 அடி நீளமுள்ள செந்நாகம் பிடிபட்டது

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே மேதலோடையை சேர்ந்த குப்புபிச்சை என்பவரது வீட்டு கிணற்றில் 5 அடி நீளமுள்ள செந்நாகம் இருந்தது. இதை கடந்த 3 நாட்களாக பிடிக்க வீட்டில் மற்றும் அருகே உள்ளவர்கள் போராடினர். பிடிக்க முடியாததால் கீழக்கரை வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


வனசரகர் ஜெயராமன் உத்தரவின் பேரில் வனவர் இன்னாசிமுத்து, வனகாப்பாளர் முத்துராமன் மற்றும் மகேந்திரன், அழகர் ஆகியோர் செந்நாகத்தை நேற்று உயிருடன் பிடித்தனர். பின்னர் கோரைகுட்டம் பகுதியில் உள்ள சதுப்பு நில காட்டில் பத்திரமாக விட்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.