Tuesday, August 6, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சி

 
 
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் இந்திய தொ ழில்நுட்ப கழகம் சார்பில் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வர் முகமது ஜகாபர் தலைமை வகித்தார். இயக்குநர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா, கொச்சி கப்பல் தொழிற் சாலை பொதுமேலாளர் (ஓய்வு) விஜயராகவன் முன்னிலை வகித்தனர்.
 
கணினி துறைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். வேகமாக வளர் ந்து வரும் நவின தொழில்நுட்ப பயன் பாட்டில் இந்தி யாவின் குறிப்பிட்ட அணு குமுறை என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொ ண்ட பேராசிரியர்களுக்கு ஆயுட்கால உறுப்பினர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 
தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் விஜயராஜ் நன்றி கூறினார். ஏற்பாடு களை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.