Thursday, August 15, 2013

கீழக்கரை- ராமநாதபுரம் தனியார் பஸ்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா! அனுமதியின்றி வைத்திருந்தால் நடவடிக்கை!


கீழக்கரை- ராமநாதபுரம் தனியார் பஸ்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா! அனுமதியின்றி வைத்திருந்தால்  நடவடிக்கை!

கீழக்கரை - ராமநாதபுரம் தனியார் பஸ் ஒன்றில் கேமரா பொருத்தபட்டிருப்பதை கண்டனர்.இது குறித்து கீழக்கரை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியும்,கண்டனமும் தெரிவித்தனர்

இது குறித்து சதக்  இப்ராஹிம் என்பவர் கூறியதாவது,

ஏராளமான பெண்கள் இந்த பேருந்தில் தினமும் சென்று வருகிறார்கள்.கேமரா பொருத்தப்பட்டுளது குறித்து எவ்வித அறிவிப்பும் பஸ்சில் இல்லை.மேலும் இது குறித்து போக்குவரத்து துறையிடம் அனுமதி வாங்கியுள்ளார்களா என்று தெரியவில்லை.

இந்த கேமரா பதிவுகளை யாரிடம் ஒப்படைக்கிறார்கள்
என்று தெரியவில்லை! எனவே இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் மேலும்  பஸ்சின் நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்..

இது குறித்து கீழக்கரை இன்ஸ்பெக்டரிடம் கேட்ட போது,

டில்லி,பாண்டிச்சேரி போன்ற இடங்களில் பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.கேமராக்கள் மூலம் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்பவர்கள், பிக்பாக்கெட் நபர்களை அடையாளம் காண முடியும்.தமிழகத்தில் வேலூரில் தொடங்கப்பட்டுள்ளது.பயணிகளின் பாதுகாப்புக்காக இது செயல்படுத்தப்படுள்ளது.

கீழக்கரை - ராமநாதபுரம்  தனியார் .பஸ்சில்  கேமரா பொருத்துவதற்கு தனியார் முறையான அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும் அவ்வாறு பஸ்சில்  பொருத்துவதற்கு அனுமதி பெற்வில்லையானால் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். இது குறித்து புகார் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.