Friday, August 16, 2013

கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் காரில் 7 கிலோ கஞ்சா! 4பேர் கைது!கார் பறிமுதல்!


கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் காரில் 7 கிலோ கஞ்சா! 4பேர் கைது!கார் பறிமுதல்!

கீழக்கரை- ராமநாதபுரம் சாலையில் திருப்புல்லானி அருகே கீழக்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அவ்வழியே வந்த காரை சோதனை சேய்த போது 7 கிலோ கஞ்சா கடத்தி வந்தது
  கண்டுபிடிக்கபட்டது .

இதனையடுத்து காரில் கஞ்சா கடத்தி வந்ததாக தங்கச்சி மடத்தை சேர்ந்த ராமசந்திரன்(30)தியாகராஜன்(47),ராமேஸ்வரம் கர்ணன்(55),கபில்ராஜன்(25) ஆகிய 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
அம்பாஸ்டர்  காரையும் பறிமுதல் செய்தனர்.கீழக்கரை இன்ஸ்பெக்டர் கனேஷன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.