Thursday, August 1, 2013

கீழக்கரையில் நூற்றுக்கணக்கான மாணவ,மாணவியர் பங்கேற்ற திறனாய்வு போட்டி



கீழக்கரை இஸ்லாமியா பள்ளி சார்பில் பள்ளி சின்ன சிறு மாணவ,மாணவியருக்கு  திறனாய்வு போட்டி நடைபெற்றது.இதில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

தினமலர் பத்திரிக்கையும் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்தியது
வரும் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு இப்போட்டிகளுக்கான பரிசுகளை   தினமலர் பத்திரிக்கை வழங்குகிறது .

ஏராளமான சின்னஞ்சிறு மாணவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இது குறித்து பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே.முகைதின் இப்ராஹிம் கூறியதாவது,

தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளி சார்பாக நடத்தி வருகிறோம்.இதன் மூலம் வளரும் இளம் தலைமுறையினரின் திறமைகளை அடையாளம் கண்டு அக்குழந்தைகளின் வருங்காலத்தை  வளமாக்க வேண்டும் என்ற முயற்சியின் முதல்படிதான் இது என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.