Thursday, May 12, 2011

2 மாதங்களாக அகற்றப்படாத மரத்தால் பொது மக்கள் அவதி



கீழக்கரை மே 12&
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் சாய்ந்து விழுந்த மரம் கடந்த இரண்டு மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
கீழக்கரையின் முக்கிய பகுதியான வள்ளல் சீதக்காதி சாலையில் 124 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரம் கடந்த மார்ச்சில் திடீரென சாய்ந்து விழுந்தது. நகராட்சி ஊழியர்கள் அம்மரத்தை ரோட்டிலிருந்து ஓரமாக ஒதுக்கி போட்டதோடு தஙகள் பணி முடிந்ததாக சென்று விட்டனர். பொதுமக்களின் நடைபாதை பகுதியில் மரம் விழுந்து கிடப்பதால் மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் சைக்கிளில் செல்வோரும், வயதானவர்களும் மரத்தில் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகையில், ‘மரம் சாய்ந்து 2 மாதங்கள் ஆகியும் அதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மரத்தின் ஒரு பகுதி பக்கவாட்டில் சாய்ந்தபடி இருப்பதால் அவ்வழியாக செல்வோர் தலையை பதம் பார்த்து விடுகிறது. இரவு நேரத்தில் வாகனங்கள் மரத்தின் மீது மோதி விழுவதும் நடக்கிறது. எனவே உடனடியாக மரத்தை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்

1 comment:

  1. KILAKARAI VISION 2020May 24, 2011 at 7:36 PM

    ETHAIKUDA SEYYA THIRANI ATTRA ULLUR NIRVAGAM URR SUGATHARATHAI ENKAY KAVANIKKA POKERATHU

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.