Wednesday, June 19, 2013

கீழக்கரை கடலில் பல்லாண்டுகளாக கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக கடலில் கலப்பதால் மீன் வளம் குறையும் அபாயம்!

(பைல்)பழைய படம்
(பைல்)பழைய படம்

கீழக்கரையில் 21 வார்டுகள் உள்ளன. சுமார் 50000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.கீழ‌க்க‌ரையில்  வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சியால் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் மூலமாக‌ சுத்திகரிக்கப்படாமல் சாக்க‌டையாக‌ கடலில் கலக்கின்றன.இதனால் கடலின் நிறம் மாறி மாசடைந்து காணப்படுகிறது.பல ஆண்டுகளாக எத்தனையோ நகராட்சி  மாறி விட்டாலும் இப்பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது
ஏற்கேனவே பவள பாறைகளை வெட்டி எடுப்பது உள்ளிட்ட‌ பல்வேறு காரணங்களால் சுற்று சூழல் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா பகுதியில் இது போன்ற சாக்கடை கலப்பதால் கடலின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு கடல் நீர் மாசடைந்து மீன் வளம் குறைந்து வருவதாக கடல் வாழ் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து சமூக நல அமைப்பின் நிர்வாகி செய்யது இப்ராகிம் கூறுகையில்

 பல இடங்களில் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டால் கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. மழை காலங்களில் மழைநீரும், கழிவுநீரும் கலந்து தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அரசு நிர்வாகம் கால்வாய் அடைப்பை சரி செய்வது,மருந்து தெளிப்பது உள்ளிட்ட‌ நடவடிக்கை எடுத்து வந்தாலும் தற்காலிக தீர்வாகவே உள்ளது.


கழிவு நீர் கலப்பதால் கடல் வாழ் உயிரனங்கள் அழிவதற்கு வாய்ப்புகள் அதிகள் ஏற்கெனவே குறிப்பிட்ட மீன் இனங்கள் இப்பகுதியில் குறைந்து விட்டது.சாக்கடை நீரை சாலையில் ஓடாமலும் ,கடலில் கலப்பதையும் தடுப்பதென்றால் நிர‌ந்த‌ர‌ தீர்வாக கீழக்கரை நகரில் பாதாள‌ சாக்க‌டை திட்ட‌த்தை அம‌ல் ப‌டுத்தினால் ம‌ட்டுமே ச‌ரி செய்ய‌ முடியும். இதன் மூலம் சாக்கடை தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீரை விவசாய‌ பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் .ஆய்வு ப‌ணிக‌ளெல்லாம் முடிக்க‌ப்பட்ட இத்திட்டம் ப‌ல‌ ஆண்டுக‌ளகாக விரைவில் துவ‌ங்கும் என‌ அறிவிப்பு ம‌ட்டுமே உள்ள‌து.ஆண்டுக‌ள் க‌ட‌க்கும் போது இத‌ற்கான‌ திட்ட‌ ம‌தீப்பீடும் அதிக‌ரிக்கும்.என‌வே விரைந்து செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.இத்திட்டம் செயல்படுத்துவதில்  சிரமம் ஏற்பட்டு தாமதாமகும் பட்சத்தில் தற்போது உடனடி நடவடிக்கையாக  கடலில் கலக்கும்  கழிவுநீரை சுத்திகரித்து கடலில் விடுவதற்கோ அல்லது விவசாய பணிகளுக்கு பயன்படுத்த  ஏறபாடு செய்து கடல் வழ் உயிரனங்களை காப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

2 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 19, 2013 at 7:50 PM

    மீன் வளம் குறையும் அபாயமா? யார் சொன்னது?
    தலைக்கு மேலே வெள்ளம் போய் வெகு காலமாகி விட்டது.

    சுனாமிக்கு பிறகு பல் வேறு கொடுமையான மாற்றங்களை கண்டு வரும் கீழக்கரை மீன் வளம், வளத்தை கருவோடு அழிக்கும் கழிவு நீர் பிரச்சனை வேறு.

    இந்த வருடம் அரசு மீன் பிடி தடை காலத்திற்கு பிறகு நிலமை இன்னும் மோசம். மீன் விற்பனை கூடத்தின் நிழைவு வாயிலை எட்டும் முன்பே மீன் விலைவாசியின் ஜுவாலை சுட்டெரிக்கிறது. டிசம்பரில் தான் மீன் விலைகள் ஊரில் ரெக்கை கட்டி பறக்கும் என்பாரகள். இப்போது அனு தினமும்.

    தற்சமயம் கீழக்கரையில் வாழ்க்கைச் செலவு ஏழைகளை வயிற்றில் ஈரத் துணியை கட்ட வைத்து விட்டது.மீன் விலை மட்டுமல்ல. கோழிக்கறி, காய்கறி விலையும் அந்தரத்தில். ஏனோ ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி மட்டும் நிதானத்தில் உள்ளது.

    ReplyDelete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 19, 2013 at 7:56 PM

    இது விஷயத்தில் அரசு தான் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மீன் வளத்தை காப்பது மூலம் மக்களுக்கு உதவ வேண்டும். மக்கள் தரப்பில் எதுவும் செய்வதற்கில்லை.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.