Sunday, May 22, 2011

கீழக்கரை இளைஞர்களால் காப்பாற்றப்பட்ட முள்ளம்பன்றி! வனத்துறையினர் பாராட்டு !


முள்ளம் பன்றி்யின் முற்கள்
60 அடி ஆழமுள்ள கிணறு



நசுருதீன்



கீழக்கரை மே.21 கீழக்கரையை அடுத்த காஞ்சிரங்குடியில் தனியாருக்கு (வா.வூ) சொந்தமான தென்னந்ததோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மு்ன் தினம் முள்ளம் பன்றி தவறி விழுந்தது.
இதை நேரில் கண்ட காவலாளி சேதுராமு தோட்டத்தி்ன் உரிமையாளர்களான ஜமீல்,ஜகுபர் அலி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.உடனடியாக இவர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.வனக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு வநது
உயிருடன் மீட்பதற்கு முயற்சி எடுத்தனர்.இரவு நீண்ட நேரமாகி விட்டதால் காலையில் வருகிறோம் என்று வனக்காவலர்கள் திரும்பி சென்று விட்டனர்.

மீண்டும் அடுத்த நாள் காலை் 11மணி வரை வனக்காவலர்கள் வரதாதால் தோட்டத்தி்ன் உரிமையாளர்கள் தங்களது நண்பர்களான நசுருதீன்,சிராஜீதீன்,முஸ்தகீம் மற்றும் தோட்ட காவலாளி ஆகியோ்ர்
உதவியுடன் கிணற்றி்ல் உயிருக்கு போராடி கொண்டிருந்த முள்ளம் பன்றியை உயிருடன் மீட்டு வலையில் கட்டி வைத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனசரக அலுவலர்கள் வநது முள்ளம்பன்றியை கைப்பற்றி வன உயிரின காப்பாளர் சுந்தரகுமார் முன்னிலையில் திருப்புல்லாணி வனப்பகுதியில் சுதந்திரமாக விடப்பட்டது.

இது குறித்து நசுருதீன் கூறியதாவது,
காட்டுப்பகுதியில் சுற்றிதிரியு்ம் இந்த முள்ளம்பன்றி எப்படி இந்த பகுதிக்கு வந்தது என்பது ஆச்சரியமளிக்கிறது.ஒரு வழியாக உயிருடன் மீட்டு விட்டோ்ம்.முள்ளம் பன்றி மேலே வந்தவுடன் ஆக்ரோசத்துடன் முடிகளை உதிர்த்து விட்டது என்றார்.

இது குறித்து வனக்காவலர்கள் கூறும் போது,
இந்த முள்ளம் பன்றிகள் ஜோடியாகத்தான் வந்திருக்கும் .எனவே இன்னொரு முள்ளம் பன்றி இப்பகுதியி்ல் மேலுமமொரு முள்ளம் பனறி இருக்குமென்று சந்தேகிக்கிறோம் எனவே தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுமமென்றார்.மேலு்ம் முள்ளம் பன்றிகள் எதிரிகளை கண்டவுடன் முற்களை உதிர்த்து விடும் முற்களால் குத்துப்பட்டால் கடு்மையான விஷத்தால பாதிக்கப்படுவர் .இதை காப்பற்றி தகவல் கொடுத்த இந்த இளைஞர்கள பாராட்டுக்குறியவர்கள் என்றார்




















3 comments:

  1. My hearty congradulation to keelakarai news team bring updated news from my native - thanks Nazir Sultan - North stree

    ReplyDelete
  2. Wish the team service to be continued Insha Allah, would be informative and assist us those resides abroad

    ReplyDelete
  3. சகோதரார் நசீர் அவர்களுக்கு, உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.