Tuesday, May 24, 2011

கீழக்கரை&ஏர்வாடி முனை ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க மக்கள் வலியுறுத்தல்


கீழக்கரை, மே 24&
கீழக்கரை&ஏர்வாடி முனை ரோடு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம், ஏர்வாடி திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி மற்றும் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் அனைத்தும் கீழக்கரை எல்லையான ஏர்வாடி முனை ரோடு பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இந்த பஸ் நிறுத்ததிற்கு அருகில் மகளிர் கல்லூரியும், தனியார் மருத்துவமனையும் உள்ளதால் ஏராளமான மாணவிகளும், நோயாளிகளும் இந்த நிறுத்தத்தில் நின்றுதான் பஸ்களில் ஏறிச் செல்கின்றனர்.
இங்கு நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள்  நிழ‌ற்குடை அமைத்து த‌ர‌ ஏற்பாடு செய்ய‌ வேண்டும். புதிய‌தாக‌ பொறுப்பேற்றுள்ள‌ ஜ‌வாஹில்லா எம்.எல்.ஏவும் இது குறித்து முய‌ற்சி எடுக்க வேண்டும்
 என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. KILAKARAI VISION 2020May 24, 2011 at 12:47 PM

    PUTHIYATHAKA PORUPPU ATRULLA MLA JANAB PROP. JAWAHIRULLA AVARKALIN THOKUDHI NIDHI IL IRUBTHU INTHA AVSHIMANA KARIYATHAI ARAMBAM SEYALAMAY

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.