Sunday, May 8, 2011

குப்பை கரையாக மாறி வரும் கீழக்கரை ! தடுமாறும் நகராட்சி


கீழக்கரை, மே 8&
கீழக்கரை நகராட்சியில் தினமும் 2 டன் குப்பைகள் குவிந்து வருகின்றன. இதனை அகற்ற முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் 45 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் வெளியூரிலிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கட்டிட வேலைக்காக கீழக்கரை வந்து செல்கின்றனர். கீழக்கரையில் நாளொன்றுக்கு 2 டன் குப்பைகள் குவிகின்றன. இந்த குப்பைகளை நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் டிராக்டரில் அள்ளிக் கொண்டு சென்று ராமநாதபுரம் செல்லும் சாலையின் ஒரு புறத்தில் குவித்து வந்தனர்.இதற்கு அவ்வழியாக செல்லும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் குப்பைகள் அனைத்தையும் கடற்கரையில் கொட்டி வைத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏர்வாடி செல்லும் சாலையின் ஓரத்தில் கொட்டி வைத்தனர். ஆனால் தற்போது அப்பகுதியில் தோட்டப் பகுதிகளில் வசிப்போர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மாற்று ஏற்பாடு இல்லாததால் குப்பைககளை எங்கு போய் கொட்டுவது என்பது தெரியாமல் நகராட்சி நிர்வாகம் விழி பிதுங்கி நிற்கிறது. இந்தப் பிரச்னையால் நகரில் குப்பைகள் அரைகுறையாக அள்ளப்படுகின்றன. தற்போது கீழக்கரை நகரமே குப்பைக்காடாக மாறி வருகிறது.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கென்னடி கூறுகையில், “பல ஆண்டுகளாக நகராட்சிக்கென்று தனியாக குப்பை கொட்டும் இடம் இல்லாமல் இருந்து வந்தது. தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் முயற்சியில் கீழக்கரை வெல்பேர் அசோசியேசன் மூலமாக தோணி பாலம் அருகில் 11.5 ஏக்கர் இடம் கிடைத்தது. நகாராட்சிக்கு குப்பைகள் கொட்டுவதற்கு இடம் கிடைத்தும் நீதிமன்ற தடை இருப்பதால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகளுடன் டிராக்டர்கள் நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்“, என்றார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த முகம்மது ஜலாலுதீன் கூறுகையில் ,நகராட்சி நிர்வாகம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் காரணத்தை மட்டும் சொல்லி கொண்டிருப்பது மாற்று திட்டத்தை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை.நகராட்சி நிர்வாகமே இந்த சுகாதார சீர்கேட்டிற்கு பொறுபேற்க வேண்டும்.தற்போது கீழக்கரையில் பல இடங்களில் குப்பைகளை நிறைந்து பெயர் தெரியாத நோய்கள் பரவி வருகிறது.ஏற்கெனெவே கீழக்கரை கடற்கரையில் குப்பைகள் கொட்டப்பட்டு அழகிய கடற்கரை சீரழிக்கப்பட்டு விட்டது . இனி கொட்டுவதற்கு இடமில்லை உடனடியாக மாநில அரசின் உயர் அதிகாரிகள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்
நகராட்சி தலைவர் பசீர் அகமது கூறுகையில், “11.5 ஏக்கர் நிலத்தில் குப்பைகளை கொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து சுத்திகரிப்பு செய்து உரம் தயார் செய்யலாம் என்ற நோக்கத்துடன் ஐந்து மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டன. இதற்கு சிலர் உயர்நீதி மன்றத்தில் இடைக்கால தடை பெற்றதால் பணி நிறுத்தப்பட்டு இங்கு குப்பைகளை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்கால தடையை நீக்குவதற்கு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம்“ என்றார்.

2 comments:

  1. 1. Reduce

    As much as possible to decrease goods or material we used everyday and change it with environment friendly material. For example, we always use plastic bag when shopping. If we shop three times a week, then within one month we will produce 12 plastic bag trash. The plastic trash will increase everyday.

    2. Reuse

    As much as possible to sort the goods which can be reused. Avoid the usage of disposable goods. This tips will extend the usage time before it becomes trash. For example, use plastic bottle that only need to fill the product refill such as oil, shop, etc. So that, we won’t produce plastic bottle trash frequently.

    3. Recycle

    As much as possible, recycle the useless goods. Not all product can be recycled, but nowadays there are so many home industries that make use of trash become other useful products. Some of them recycle plastic into craft.

    4. Replace

    Check our daily goods carefully. Change one time usage goods (disposable goods) with imperishable goods and only use the environment friendly goods.

    ReplyDelete
  2. இச்செய்தியை தெரியப்படித்தியதற்க்கு நன்றி கீழக்கரை செய்தி குழுமத்திற்கு
    - ரோடுரபீ.வீப்லி.com

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.